Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 15 December 2015

இன்றைய புனிதர் 2015-12-15 சபை நிறுவுனர் யோஹானஸ் ஹைன்றி சார்லஸ் Johannes Heinrich Karl

                              

பிறப்பு 18 டிசம்பர் 1773, தூபிங்கன் Tübingen, ஜெர்மனி

இறப்பு 15 டிசம்பர் 1856, வெரோனா Verona, இத்தாலி

முத்திபேறுபட்டம்: 6 ஜூலை 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்

இவர் தனது 19 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவ மறையை தழுவினார். 1796 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் இவர் வெரோனாவில் இருந்த குருமட மாணவர்களுக்கு இறையியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றினார். இருந்தபோதும் வெரோனா நகரின் ஆன்மீக குருவாகவும் இவர் பணியாற்றினார். இவர் வெரோனா நகரில் வசித்த ஏழை மக்களின் மேல் தனி அன்பு கொண்டிருந்தார். சிறை கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்படுத்தும் பணியையும் ஆற்றினார்.

இவர் நாள்தோறும் மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து தைரியமூட்டினார். போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வில் நம்பிக்கையின்றி வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். படைவீரர்களுக்கு அறிவூட்டி தைரியப்படுத்தினார். இவர் வெரோனாவில் பல ஆன்மீக குருக்களை உருவாக்கினார். இவர் 1840 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரிகள் என்ற சபையை வெரோனாவில் தொடங்கினார்.


செபம்:
இரக்கமும், கருணையும் நிறைந்த இறைவா! உம் இறைப்பணியை சிறப்புடன் ஆற்றி உம் ஊழியராக திகழ்ந்த இன்றைய புனிதரின் செயல்களை நாங்கள் பின்பற்ற உம் அருள் தாரும். இவரைப்போல நாங்களும் உண்மையுள்ள ஊழியராக வாழ்ந்து உம் பணியில் முழுமையுடன் பங்குகொள்ள உமதருள் தந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment