Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 19 December 2015

இன்றைய புனிதர் 2015-12-19 திருத்தந்தை 5 ஆம் உர்பான் Urban V OSB

                                               

பிறப்பு 1310, கிரிசாக் Grisac, பிரான்சு

இறப்பு 19 டிசம்பர் 1370, அவிஞான் Avignon, பிரான்சு

இவர் குயிலாமே கிரிமோவார்ட் Guillaume Grimoard பெயரால் என்றழைக்கப்பட்டார். இவர் அவிஞான் நகர் திருத்தந்தை என் றும் அழைக்கப்பட்டார். இவர் தன் 52 ஆம் வயதில் அவிஞான் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகக் கடுமை யான செப தவ வாழ்வை வாழ்ந்தார். தன் மறைமாவட்ட மக்க ளையும் சிறந்த எடுத்துக்காட்டான செப வாழ்வை வாழத் தூண் டினார். பல காரணங்களால் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடு க்கப்பட்டார். இவர் அரசர் 4 ஆம் கார்ல் ஸ்வேபன் நாட்டு பிர்ஜிட்டா Birgitta von Schweben இவர்களுக்கு பல விதங்களில் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார். இவர் தன் இருப்பி டத்தை அவிஞான் நகரில் கொண்டு செயல்பட்டார். இதனால் பலரின் அதிருப்திக்கு ஆளானார். அதன் காரணமாக தன் இருப் பிடத்தை உரோம் நகருக்கு மாற்றினார். 16 அக்டோபர் 1367 ஆம் ஆண்டில்தான் தனது திருத்தந்தை பணியை ரோமில் தொட ங்கினார். அதுவரையிலும் அவிஞான் நகரில் இருந்தவாறே திருச்சபைப் பணிகள் அனைத்தையும் ஆற்றினார்.

                                                            இவர் உரோம் நகருக்கு வந்த பிறகு பலவிதமான வித்தியாசமான பிரச்சனைகளை சந்தித்தார். மக் களிடையே அமைதி சீர்குலைந்தது. பல பிரிவினைகள் ஏற்ப ட்டது. இதனால் திருத்தந்தை மிகவும் வருத்தத்திற்குள்ளாகி வேதனை அடைந்தார். அதன்பின் 1370 ஆம் ஆண்டு, பிரான்சு க்கும் இங்கிலாந்துக்குமிடையே போர் மூண்டது. அச்சமய த்தில் திருத்தந்தை 5 ஆம் உர்பான் மீண்டும் அவிஞான் சென் றார். இவர் அவிஞான் செல்லக்கூடாது என்று ஸ்வேபன் நாட்டு சபை நிறுவினர் பிர்கிட்டா தடுத்தார். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி திருத்தந்தை அவிஞான் சென்றவுடன் அங்கேயே மறைசாட்சியாக மடிந்தார். இவர் அங்கேயே அட க்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை மேல் இன்று, புனித விக்டர் என்ற பெயரில் பேராலயம் உள்ளது.


செபம்:
நலன்களை தருபவரே எம் தலைவா! திருத்தந்தை 5 ஆம் உர்பான் வழியாக அவிஞான் என்ற மறைமாவட்டத்தை விசுவாசத்தை விதைத்தீர். உம் அருளால் தொடர்ந்து அம்மக்களை நிரப்பும். அன்று அவர்கள் பெற்ற இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தொடர்ந்து அவர்களுடையதாக்கி என்றென்றும் உம்முடைய மக்களாக வாழும் பேற்றை அளித்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

No comments:

Post a Comment