Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 19 December 2015
இன்றைய புனிதர் 2015-12-19 திருத்தந்தை 5 ஆம் உர்பான் Urban V OSB
இவர் குயிலாமே கிரிமோவார்ட் Guillaume Grimoard பெயரால் என்றழைக்கப்பட்டார். இவர் அவிஞான் நகர் திருத்தந்தை என் றும் அழைக்கப்பட்டார். இவர் தன் 52 ஆம் வயதில் அவிஞான் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகக் கடுமை யான செப தவ வாழ்வை வாழ்ந்தார். தன் மறைமாவட்ட மக்க ளையும் சிறந்த எடுத்துக்காட்டான செப வாழ்வை வாழத் தூண் டினார். பல காரணங்களால் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடு க்கப்பட்டார். இவர் அரசர் 4 ஆம் கார்ல் ஸ்வேபன் நாட்டு பிர்ஜிட்டா Birgitta von Schweben இவர்களுக்கு பல விதங்களில் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார். இவர் தன் இருப்பி டத்தை அவிஞான் நகரில் கொண்டு செயல்பட்டார். இதனால் பலரின் அதிருப்திக்கு ஆளானார். அதன் காரணமாக தன் இருப் பிடத்தை உரோம் நகருக்கு மாற்றினார். 16 அக்டோபர் 1367 ஆம் ஆண்டில்தான் தனது திருத்தந்தை பணியை ரோமில் தொட ங்கினார். அதுவரையிலும் அவிஞான் நகரில் இருந்தவாறே திருச்சபைப் பணிகள் அனைத்தையும் ஆற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment