Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 17 December 2015

இன்றைய புனிதர் 2015-12-17 மாட்டா நகர் யோவான் Johannes von Matha

பிறப்பு 23 ஜூன் 1160, பவ்கோன் Faucon, பிரான்சு

இறப்பு 17, டிசம்பர் 1213, உரோம், இத்தாலி

பாதுகாவல்: மூவொரு இறைவன் சபை

இவர் பாரிஸ் நகரில் இறையியல் படிப்பைப் பயின்றார். பின்னர் 1185 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஒரு சமயம் இவர் செபித்துக்கொண்டிருக்கும்போது மூவொரு இறைவனைப்பற்றி திருக்காட்சி ஒன்றைக் கண்டார். அத்திருக்காட்சியில் மூவொரு இறைவனுக்கென்று சபை ஒன்றை நிறுவும்படி கூறியதாக உணர்ந்தார். இதனால் 1198 ஆம் ஆண்டு டிசம்பர் தமத்திருத்துவ சபை (மூவொரு இறைவன் சபை) என்றதொரு சபையை மேயாக்ஸ் (Meaux) என்ற மறைமாவட்டத்தில் துவங்கினார். இச்சபையின் ஒழுங்குகளை தயாரித்து அதைப் பின்பற்றுவதற்கு திருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட் பெருமளவில் உதவினார்.

இப்புதிய சபையானது மிக வேகமாக பிரான்சு நாடு முழுவதும் பரவியது. பின்னர் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்திலும் அதிவேகமாக பரவியது. இச்சபை குருக்கள் உலகின் எப்பகுதியிலும் இருந்த சிறைக்கைதிகளின் விடுதலைக்காக உழைத்தனர். இப்பணியை செய்வதற்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைப்பெண்கள், அச்சபையில் பணியாளர்களாகச் சேர்ந்தனர். மேலும் அச்சபை சகோதரர்களை நோயாளிகளை கவனிக்கும் பணிக்கும், படைவீரர்களுக்கு ஆன்ம வாழ்வில் வளர்வதற்கு வழிகாட்டுவதற்கும் தயாரித்தார். இச்சபையினர் வெள்ளை அங்கி அணிந்து சிவப்பு நிற சிலுவையை அணிந்து, கருப்பு நிறத்தில் நீளமான உடை உடுத்த வேண்டுமென்று பணித்தார். பல்வேறு விதங்களில் தன் சபையை வளர்த்தெடுத்து, சபைக்கு அங்கீகாரம் பெற்றபின் இறந்தார்.


செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! தமத்திருத்துவ சபையை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அச்சபை சகோதர சகோதரிகளாக நீர் எந்நாளும், எச்சூழலிலும் உடனிருந்து வழிநடத்தும். அச்சபை தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து காலத்தின் சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு, உம் இறையாட்சியில் நிறைவு பெற, உம் அருளையும் ஆசிரையும் தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment