Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 31 December 2015

இன்றைய புனிதர் 2015-12-31 குளுனி சபை துறவி ஒடில்லோ Odilo von Cluny OSB

                                               
பிறப்பு 962, அவேர்ஜினே Auvergne, பிரான்சு
இறப்பு 31 டிசம்பர் 1048, சேவிஜ்னி Souvigny, பிரான்சு

இவர் தனது 30 ஆம் வயதில் 991 ஆம் ஆண்டு குளுனி துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்று மூன்றே ஆண்டுகளில் தலைமைபொறுப்பை ஏற்று அத்துறவற சபையை வழிநடத்தினார். இவர் எப்போதும் தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்து செயல்பட்டார். இவர் தனது சபையை சிறந்த விதத்தில் வளர்த்தெடுத்தார். பல விதங்களில் முயற்சி செய்து பல்வேறு வழிகளில் தன் சபைக் குருக்களை பணியாற்ற ஊக்கமூட்டினார். இவர் பல ஆயர்களையும், திருத்தந்தையர்களையும் வழிநடத்தினார். பல குருக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் தனது பதவிகாலத்தில் ஏறக்குறைய 60 துறவற இல்லங்களை நிறுவினார். அனைத்து குருக்களையும் இறைப்பணியில் வேரூன்றி வாழ வழிகாட்டினார்.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குளுனி சபையின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்து மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒடில்லோவை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம், அச்சபையை தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்தியருளும். அச்சபையிலுள்ள ஒவ்வொருவரும் உமது மகிமைக்காக செயல்பட்டு உம்மை முன்னிறுத்தி பணியாற்றிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment