Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 24 December 2015

இன்றைய புனிதர் 2015-12-24 சபை நிறுவுனர் பவுலா எலிசபெத்து செரியோலி Paula Elisabeth Cerioli

                                           

பிறப்பு16 ஜனவரி 1816, சோன்சினோ Soncino, இத்தாலி

இறப்பு 24 டிசம்பர் 1865, கோமோண்டேComonte, இத்தாலி

முத்திபேறுபட்டம்: 19 மார்ச் 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் ஓர் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். 20 ஆம் வயதில் பணக்காரரின் மகன் ஒருவரை திருமனம் செய்தார். பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயாரானார். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் பிறந்த உடனேயே மரணத்தைத் தழுவியது, அதன்பிறகு இவரின் கணவரும் தீவிர நோயால் தாக்கப்பட்டு இறந்து போனார். இதனால் தன் உடமைகளில் பாதியை தன்னுடைய உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். மீதமிருந்தவற்றைக் கொண்டு 1856 ஆம் ஆண்டில் அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கென்று ஓர் சபையை உருவாக்கினார்.

இவர் அச்சபையின் முதல் சபைத்தலைவியாக இருந்து வழிநடத்தினார். அச்சபை ஊரைவிட்டு தள்ளி வெளிப்புறமாக மிகுந்த இயற்கை வளத்தோடு இருந்ததால் குழந்தைகள் பள்ளி செல்ல இயலாமல் இருந்தது. இருப்பினும் அங்கேயே பள்ளிக்கூடம் ஒன்றையும் நிறுவி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் கல்விக்கற்க வைத்தார். இவர் தொடங்கிய அச்சபை திருக்குடும்ப சகோதர சகோதரர்கள் Schwestern und Brüdern von der Heiligen Familie என்று பெயரிடப்பட்டு, 1901 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

செபம்:
தாவீதின் குமாரனே எம் இயேசுவே! நீர் குழந்தைகளை நேசித்ததுபோல, பவுலா எலிசபெத்துக்கும் அவ்வுணர்வுகளை கொடுத்துள்ளீர். இவ்வுலகில் நடக்கும் அநீதிகள் அனைத்திலும் பெருமளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதை நன்கு அறிவீர். குழந்தைகளுக்கெதிராக செயல்படும் அனைத்து அநீதிகளையும் நீர் தயைகூர்ந்து அகற்றி விடுதலைத் தாரும். ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்பட்டு, அவர்களின் வழியாக உமது இறையாட்சியை இம்மண்ணில் விதைத்திட ஆசீர் வழங்கி காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment