Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 27 December 2015

இன்றைய புனிதர் 2015-12-27 அப்போஸ்தலர், நற்செய்தியாளர் யோவான் Apostel Johannes, Evangelist

                                       

பிறப்பு முதல் நூற்றாண்டு, பெத்சாயிதா Bethsaida

இறப்பு 101, எபேசு Ephesus, துருக்கி

பாதுகாவல்: இறையியலாளர்கள், எழுத்தாளர்கள், நூலகங்கள், அச்சகத்தார், வலிப்பு நோயிலிருந்து

இவர் செபதேயுவின் மகன். சலோமி என்பவர் இவரின் தாய். இவர்கள் கலிலேயா கடற்கரையில் வாழ்ந்தார்கள். இவர் தன் பெற்றோரால் வறுமை தெரியாத அளவிற்கு வளர்க்கப்பட்டார். இவரும் சகோதரர் ஜேம்சும் James, ஜோர்டான் Jordan நதியில் திருமுழுக்கு கொடுத்து, இயேசுவைப்பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அதை கூர்ந்து கவனித்து "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். சீடர்கள் இருவரும் இயேசு வை பின் தொடர்ந்தனர். இயேசு அவர்களை திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மை பின்தொடர்வதைக்கண்டு, என்ன தேடுகிறீ ர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ரபி, நீர் எங்கே தங்கி இருக்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப்பார்த்து அவரோடு தங்கியிரு ந்தனர்.

              யோவான், இயேசு சென்ற இடமெல்லாம் தானும் உடன் சென்றார். இயேசுவிடமிருந்து நோய்களை குணமாக்கும் வல் லமையை பெற்றார். நாளடைவில் இயேசுவின் அன்பு நண்ப ரானார். இவர் இயேசுவோடு கெத்சமனி தோட்டத்திலும் உட னிருந்தார். பின்னர் இயேசுவின் சாவின்போது அவரின் தாயை தன் தாயாக ஏற்கும் பேற்றை பெற்றார். இயேசு உயிர்த்தெழுந்து கலிலேயா கடற்கரைகளுக்கு சென்று உரையாடியபோது, முத லில் யோவான்தான் இயேசுவை அடையாளம் கண்டார்.

இவர் தனது 69 ஆம் வயதில் எபேசு நகர் சென்று அனைத்து ஆல யங்களையும் கண்காணித்து வந்துள்ளார். 95ஆம் வயதில் அர சன் தொமிசியன் Domitian என்பவரால் கிறிஸ்துவைப் பற்றி அறி வித்ததற்காக பிடிக்கப்பட்டார். அவ்வரசன் அவரை கொதிக்கும் எண்ணெய் பானைக்குள் விட்டு வதைத்துள்ளான். இருப்பினும் யோவான் தன் விசுவாசத்திலிருந்து சிறிதும் மனந்தளரவி ல்லை, இறக்கவுமில்லை. இதனால் அரசன் பயமுற்று கிரேக்க நாட்டு பாட்மோஸ் Patmos என்ற நதியோரத்திற்கு அழைத்துச் சென்று சுட்டெரித்தான். ஆனால் யோவானின் இறைவிசுவாசம் அவரை அழிக்கவிடவில்லை. பின்னர் எபேசு நகரத்திற்கு திரு ம்பி அழைத்துவரப்பட்டார். அரசன் தொமிசியனின் இறப்பிற்கு பிறகு யோவான் எபேசு முழுவதும் நற்செய்தியை பறைசாற்றி அதை எழுதினார். அதன்பின் தனது முதிர்ந்த வயதில் இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! திருத்தூதரான புனித யோவான் வழியாக உம்முடைய வார்த்தையின் ஆழ்ந்த மறையுண்மைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினீர். இவர் எமக்கு சிறந்த முறையில் போதித்த உண்மைகளை நாங்கள் போதிய அறிவுத்திறனுடன் புரிந்துகொண்டு உம் வழியில் எம் வாழ்வை வாழச் செய்தருளும்.

No comments:

Post a Comment