Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 27 December 2015
இன்றைய புனிதர் 2015-12-27 அப்போஸ்தலர், நற்செய்தியாளர் யோவான் Apostel Johannes, Evangelist
இவர் செபதேயுவின் மகன். சலோமி என்பவர் இவரின் தாய். இவர்கள் கலிலேயா கடற்கரையில் வாழ்ந்தார்கள். இவர் தன் பெற்றோரால் வறுமை தெரியாத அளவிற்கு வளர்க்கப்பட்டார். இவரும் சகோதரர் ஜேம்சும் James, ஜோர்டான் Jordan நதியில் திருமுழுக்கு கொடுத்து, இயேசுவைப்பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அதை கூர்ந்து கவனித்து "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். சீடர்கள் இருவரும் இயேசு வை பின் தொடர்ந்தனர். இயேசு அவர்களை திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மை பின்தொடர்வதைக்கண்டு, என்ன தேடுகிறீ ர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ரபி, நீர் எங்கே தங்கி இருக்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப்பார்த்து அவரோடு தங்கியிரு ந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment