Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 19 December 2015
இன்றைய புனிதர் 2015-12-20 சிலோஸ் நகர் குரு தொமினிக் Dominikus von Silos OSB
இவர் 1030 ஆம் ஆண்டு பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். அப்போது அச்சபை குருக்கள் பலர் மறைசாட்சிகளாக மடிந்து கொண்டிருந்தனர். இதனால் இவர் அத்துறவற மடத்தின் தலை வராக பொறுப்பேற்று செயல்பட்டார். 4 வருடங்கள் கானாசில் பணியாற்றியப் பின் தொமினிக் சான் மில்லான் டி லா கொகோலா San Millan de la cogola என்றழைக்கப்பட்ட ஊருக்கு திரும்பினார். அங்கு அரசர் கார்சியா Garcia பேராலயம் ஒன்றை யும் கட்டினார். தொமினிக் அப்பேராலயத்தில் மறைப்பணிக் காக அமர்த்தப்பட்டார். இவர் எப்போதும் நன்றி நிறை மனது டன் அவ்வூர் மக்களிடையே பணியாற்றினார். அதன்பின் 1041 ஆம் ஆண்டு சிலோஸ் சென்று அங்கிருந்த தன் துறவற இல்ல த்தில் தங்கி மறைப்பணியாற்றினார். அங்கு கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார். இவர் பாழடைந்துகிடந்த தன் துற வற இல்லத்தையும் புதுப்பித்தார். இதனால் மக்கள் வெகுண் டெழுந்து வெறிக்கொண்டு அம்மடத்துறவிகள் அனைவரையும் தாக்கினர். இருப்பினும் அவைகளைக் கண்டு அஞ்சாமல் இறை வனின் மகிமைக்காக "ஆராதனை மையம்" என்ற பெயரில் மற்றும் ஒரு இல்லத்தை கட்டினார். அவ்வில்லத்தில் தொமி னிக் 30 ஆண்டுகள் தங்கி பணியாற்றினார். வீழ்ச்சியடைந்து காணப்பட்ட விசுவாச வாழ்விற்கு உரமூட்டி இறை விசுவாச த்தை அம்மண்ணில் தழைக்கச் செய்தார். இதற்காக பல முறை இரத்தம் சிந்தி அடிபட்டு போராடினார். இவர் இறந்தபிறகு அவ் வூர் மக்களாலும் அவர் சபை துறவிகளாலும் ஒரு புனிதருக்கு செய்யப்படும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment