Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 19 December 2015

இன்றைய புனிதர் 2015-12-20 சிலோஸ் நகர் குரு தொமினிக் Dominikus von Silos OSB

                             

பிறப்பு1010,கானாஸ் Canas, ஸ்பெயின்

இறப்பு 20 டிசம்பர் 1073,சிலோஸ் Silos, ஸ்பெயின்

பாதுகாவல்: கைதிகள், ஆயர்கள்

இவர் 1030 ஆம் ஆண்டு பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். அப்போது அச்சபை குருக்கள் பலர் மறைசாட்சிகளாக மடிந்து கொண்டிருந்தனர். இதனால் இவர் அத்துறவற மடத்தின் தலை வராக பொறுப்பேற்று செயல்பட்டார். 4 வருடங்கள் கானாசில் பணியாற்றியப் பின் தொமினிக் சான் மில்லான் டி லா கொகோலா San Millan de la cogola என்றழைக்கப்பட்ட ஊருக்கு திரும்பினார். அங்கு அரசர் கார்சியா Garcia பேராலயம் ஒன்றை யும் கட்டினார். தொமினிக் அப்பேராலயத்தில் மறைப்பணிக் காக அமர்த்தப்பட்டார். இவர் எப்போதும் நன்றி நிறை மனது டன் அவ்வூர் மக்களிடையே பணியாற்றினார். அதன்பின் 1041 ஆம் ஆண்டு சிலோஸ் சென்று அங்கிருந்த தன் துறவற இல்ல த்தில் தங்கி மறைப்பணியாற்றினார். அங்கு கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார். இவர் பாழடைந்துகிடந்த தன் துற வற இல்லத்தையும் புதுப்பித்தார். இதனால் மக்கள் வெகுண் டெழுந்து வெறிக்கொண்டு அம்மடத்துறவிகள் அனைவரையும் தாக்கினர். இருப்பினும் அவைகளைக் கண்டு அஞ்சாமல் இறை வனின் மகிமைக்காக "ஆராதனை மையம்" என்ற பெயரில் மற்றும் ஒரு இல்லத்தை கட்டினார். அவ்வில்லத்தில் தொமி னிக் 30 ஆண்டுகள் தங்கி பணியாற்றினார். வீழ்ச்சியடைந்து காணப்பட்ட விசுவாச வாழ்விற்கு உரமூட்டி இறை விசுவாச த்தை அம்மண்ணில் தழைக்கச் செய்தார். இதற்காக பல முறை இரத்தம் சிந்தி அடிபட்டு போராடினார். இவர் இறந்தபிறகு அவ் வூர் மக்களாலும் அவர் சபை துறவிகளாலும் ஒரு புனிதருக்கு செய்யப்படும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
நீதியின் மன்னரே எம் கிறிஸ்துவே! இன்னல்கள் பல அடை ந்தாலும் சோர்வுறாமல் உம்மில் நம்பிக்கைக்கொண்டு உம் சக்தியை பெற்று விசுவாசத்தை நிலைநாட்டிய இன்றைய புனிதரைப்போல, எங்கல் மீதும் உம் தூய ஆவியை பொழிந்து திடப்படுத்தியருளும். எந்தப் பணியிலும் துணிந்து உழைத்து எழுச்சியை ஏற்படுத்த நீர் துணையாய் உடன் வந்து எம்மை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

No comments:

Post a Comment