Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 28 December 2015

இன்றைய புனிதர் 2015-12-29 பேராயர் மறைசாட்சி தோமாஸ் பெக்கெட் Thomas Becket

                                             

பிறப்பு1118,லண்டன், இங்கிலாந்து

இறப்பு29 டிசம்பர் 1170,காண்டர்பரி , இங்கிலாந்து

புனிதர்பட்டம்: 21 பிப்ரவரி 1173, திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்

இவர் ஓர் வியாபாரிகள் மகனாகப் பிறந்தார். பாரிஸ் மற்றும் போலோஞ்யாவில் தனது ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை பயின்றார். பின்னர் காண்டர்பரியில் தேயோபால்டு என்ற பெயர் கொண்டு பேராயர் பதவி ஏற்றார். இவரின் 37 ஆம் வயதில் அரசர் 2 ஆம் ஹைன்ரிக் Heinrich என்பவரின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். இருவருக்குமிடையே நாளடைவில் மிகுந்த நெருக்கம் உண்டானது. அரசர், அரசியல் சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு ஆயர் தோமாஸ் பெருமளவில் உதவினார். பின்பு அரசர் ஆயர் தோமாஸிடம் காண்டர்பரி நகர் முழுவதையும் கண்காணிக்கும்படி வேண்டினார். அதன்பேரில், ஆயர் கிறிஸ்துவ விசுவாசத்தை நாடு முழுவதிலும் பரப்பினார். அரசரின் உதவியுடன் நாடு முழுவதிலுமிருந்த ஏழைகளை ஒன்றாகக் கூட்டி அவர்களுடன் கலந்துரையாடி வேலை வாய்ப்பை வழங்கினார்.

இவர் ஏழை மக்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வை முன்னேற்ற அம்மக்களை கொண்டு ஆலயங்களை எழுப்பினார். மக்கள் எவ்வித பயமின்றி சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்தார். இதனால் அரசன் ஆயரின் நற்செயல்கள் பலவற்றைக் கண்டு பொறாமைக்கொண்டான். மக்கள் தனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கமாட்டார்கள் என்று உணர்ந்தான். இதனால் ஆயரின் மேல் பொய்க்குற்றம் சுமத்தி தண்டனையாக பணம் செலுத்தும்படி கூறினான். இதனை ஆயர் மறுத்ததால் அவரை அரசன் நாடு கடத்தினான். அவரை ஆயர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயன்றார். மக்கள் அரசனின் மூட செயல்களை கண்டு, அரசனுக்கெதிராக எழுந்தனர். இதனால் அரசன் கோபங்கொண்டு போர் தொடர்ந்தான். அரசன் ஆயரை நாடு கடத்தினான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசன் ஆயரை இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வந்து, கொலைசெய்தான். இவர் இறந்த உடனேயே மக்களால் அவர் புனிதர் என்று புகழப்பட்டார். இறந்த மூன்றே ஆண்டுகளில் ஆயர் தோமாஸ் பெக்கெட் புனிதர்பட்டம் பெற்றார். தான் இறந்த பிறகும் காண்டர்பரி நகர் மக்களுக்கு பல புதுமைகளை செய்து அவர்களை காத்து வழிநடத்தினார். இவைகளை பார்த்த அரசன் 2 ஆம் ஹைன்ரிக்கும் தன் தவற்றை உணர்ந்து மனமாறி முழுமையாக கிறிஸ்துவை பின்பற்றினான்


செபம்:
நாளும் நன்மை செய்பவரே! எம் நண்பரே! காண்டர்பரி மக்கள் விசுவாசத்தில் ஆழப்பட்டு உம்மை ஏற்றுக்கொள்ள ஆயர் தோமாசை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அந்நகர் மக்களை தொடர்ந்து இவரின் பரிந்துரையால் காத்து வழிநடத்தி நலமான வாழ்வை வழங்கும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment