Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 23 December 2015

இன்றைய புனிதர் 2015-12-23 துறவி ஆஞ்சலா அவுட்ஷ் Angela Autsch

                        

பிறப்பு 26 மார்ச் 1900, ரோலக்கன் Röllecken, ஜெர்மனி

இறப்பு 23 டிசம்பர் 1944, அவுஷ்விட்ஸ் வதை முகாம் Auschwitz, போலந்து

இவர் 27 செப்டம்பர் 1933 ஆம் ஆண்டு தமத்திருத்துவ சபையில் சேர்ந்தார். தனது துறவற வாழ்விற்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் பெற்று 28 செப்டம்பர் 1938 ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை பெற்று துறவியானார். திரு இருதய இயேசுவின் ஆஞ்சலா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவர் அத்துறவற சபையில் இருந்த வயது முதிர் ந்த துறவிகளை கவனித்துக் கொண்டும் இன்னும் பணிகளில் உதவி தேவைப்படுவோர்க்கும் உடனடியாக சென்று உதவி செய்தும் வந்தார். இவர் ஹிட்லரின் நாசிக்கொள்கையை கடை பிடிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஹிட்லர் தோழர்கள் சிலரால் 12ஆகஸ்ட் 1940 ஆம் ஆண்டு கைதியாகப்பிடிக்கப்பட்டார். பிறகு ராவென்ஸ்பூர்க் Ravensbrück என்ற நகருக்கு நாடு கடத்தப்பட்டது.

இவர் வதைமுகாமில் இருந்தபோதும் கூட தன்னுடன் இருந்தவ ர்களுக்கு இயேசுவின் பெயரால் உதவினார். இறை நம்பிக்கை யிலிருந்து சிறிதும் தளராமல் நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்துக்கொண்டே சென்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அவரின் துறவற மடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டார். பின்னர் மீண்டும் அவுட்ஷ் Autsch என்ற நகருக்கு பிடித்து செல்லப்பட்டார். 26 மார்ச் 1942 ஆம் ஆண்டு தனது42 ஆம் ஆண்டு பிறந்தநாளை வதைமுகாமில் சிறப்பி த்தார்.

அதன்பிறகு அங்கேயே உணவு தயாரிப்பதற்கும் துணிகளையும் துவைப்பதற்கும் வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றார். இவர் தன்னுடன் இருந்த பெண்களுக்கு தன்னால் இயன்ற வரை பலவிதமான உதவிகளை செய்தார். பெண்கள் குளிப்பதற்கான சோப்பையும், சூடான நீரையும் தயாரித்துக்கொடுத்து உதவினார். பசியில் வாடியோர்க்கும் போதுமான உணவை எவரும் அறியாதவண்ணம் கொடுத்து பசியாற்றினார். அதேப்போல் ஹிட்லருக்கு தெரியாமல் உடைகளை சேகரித்து தந்தார். நோயுற்றிருந்த மக்களை வேலை செய்ய விடாமல் தானே அனைத்து பணிகளையும் செய்து நோயாளிகளை காத்தார். இதனால் தான் சிறிதும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்டார்.

இவர் வதைமுகாமில் ஹிட்லரின் பிடியிலிருந்து அனைத்து மக்களாலும் அனைவரையும் காக்க வந்த ஏஞ்சல்(Angel) என்றே புகழப்பட்டார். எப்போதும் புன்முறுவலுடன் உடனிருந்தவர்க ளின் துன்பங்களைப் போக்கினார். இவ்வாறு எல்லோரின் இத யங்களிலும் இடம்பிடித்த ஏஞ்சல் குண்டுமழை வீசப்பட்டதில் சிக்கி இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
உயிருள்ள இறைவா! நீர் இவ்வுலகில் வாழ்கின்றீர் என்பதை துறவி ஆஞ்சலாவின் வழியாக வெளிப்படுத்தினீர். இத்துறவின் கள்ளங்கபடமற்ற தாராள மனதினை நாங்களும் பெற்று எங் களை சுற்றி உள்ளவர்களுக்கு மனமுவந்து உதவி என்றென் றும் உம்மை இவ்வுலகில் நிலைநாட்டி உம் துணையுடன் செய ல்பட உமதருள் தந்திடுமாறு தந்தையே உம்மை இறைஞ்சுகின் றோம்.

No comments:

Post a Comment