Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 22 December 2015

இன்றைய புனிதர் 2015-12-22 பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி Franziska Xaviera Cabrini

                                     

                          பிறப்பு15 ஜூலை 1850,
சான் ஆஞ்சலோ லோடிகியனோ Sant Angelo Lodigiano, இத்தாலி

இறப்பு 22 டிசம்பர் 1917, சிகாகோ

முத்திபேறுபட்டம்: 1938
புனிதர்பட்டம்: 7 ஜூலை 1950 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
பாதுகாவல்: வீட்டு வேலை செய்பவர்கள்

இவர் தனது 24 ஆம் வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றி ருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார். விதவை பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார். இவ் வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் ஆசையையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இறுதியாக 1880 ஆம் ஆண்டு புனித இதய த்தின் மறைப்பணியாளர்கள் Missionarinnen vom Heiligsten Herzen என்ற சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபை த்தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

                                              இவர் இச்சபையை துவங்கிய ஒரு வருடம் கழித்து, திருத்தந்தை 13 ஆம் லியோ துறவற சபை என்று அறி வித்து, அங்கீகாரம் அளித்தார். மிகப் புகழ் வாய்ந்த மறைப்பரப் பாளர் புனித பிரான்சிஸ் சவேரியாவின் பெயரையும் தன் சபை யின் துணைப் பெயராக வைத்தார். இவர் சபையை தொடங்கிய ப்பின்பும், சபை தனித்து இயங்குவதற்கு தேவையான சில பணி களை நிறைவேற்றாமல் இருந்தார். இருப்பினும் அமெரிக்கா சென்று1888 ல் நியூயார்க்கில் பெரிய துறவற இல்லம் ஒன்றை எழுப்பினார். அங்கு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனித்து செயல்படும் நிறுவனங்கள் பலவற்றையும் நிறுவி னார்.

                                              சிறப்பாக இவர் தாய்நாட்டை விட்டுவிட்டு நில புலன்களை இழந்து உறவென்று சொல்ல யாருமின்றிருந்த மக்களை தன் இதயத்தில் சுமந்து, அம்மக்களுக்கென்று தனி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். இதனால் அந்நாட்டு மக் கள் பலர் இவரின் நற்பணிகளுக்கு உதவ முன் வந்தனர். பின் னர் அவ்வுதவியாளர்கள் பலரின் நட்பைக்கொண்டு, மீண்டும் சிகாகோவில் சபை ஒன்றை நிறுவினார். தற்போது இத்துறவற இல்லமே, அச்சபையின் தலைமையகமாக Generalate செயல் பட்டு வருகின்றது. அதன்பிறகு இச்சபையின் பணிகளால் பல இளம் பெண்கள் கவரப்பட்டு அச்சபைக்கு வந்து சேர்ந்தனர்.

பிரான்சிஸ்கா சவேரியா அத்துறவற மடத்தில் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தார். ஒருநா ளில் 20 மணிநேரம் இயேசுவின் நற்செய்திப்பணியை ஆற்றி னார். மீதமுள்ள நேரங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து நற்கருணை நாதரிடம் செபித்து வந்தார். இதன் பய னாக ஏராளமான பணிகளைச் செய்தார்.


செபம்:
எல்லோர்க்கும் எல்லாமுமானவரே! உம்மிடமிருந்து சக்தியை பெற்று, பல பணிகளை ஆற்றி முழுமையாக உம் நற்செய்திப் பணியில் பங்குகொண்ட புனித பிரான்சிஸ்கா சவேரியாவை நீர் இவ்வுலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகின்றோம். அவரின் அருட்து ணையால் அச்சபைத் துறவிகள் மேன்மேலும் வளர்ந்து உம்மை போற்றிப் புகழ்ந்து வாழ வரமருளும்.

No comments:

Post a Comment