Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 21 December 2015

இன்றைய புனிதர் 2015-12-21 சபை நிறுவுனர் பீட்டர் ஃபிரீட்ஹோஃபன் Peter Friedhofen

                                       

பிறப்பு 25 பிப்ரவரி 1819, வாலெண்டர் Vallendar, Germany

இறப்பு21 டிசம்பர் 1860,கோப்லென்ஸ் Koblenz, Germany

முத்திபேறுபட்டம்: 23 ஜூன் 1985 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்

இவர் வாலண்டர் Vallendar என்ற நகரிலுள்ள வைட்டர்ஸ்பூர்க்கில் Weitersburg புகைப்போக்கியை தூய்மை செய்யும் தொழிலை Schornsteinfeger செய்தார். தினமும் அதிகாலையில் எழுந்து பணியை தொடங்கிச் சென்று பல புதிய மனிதர்களையும், வாழ்க்கை என்றால் என்ன? என்பதையும் தன் அனுபவத்தின் வழியாக கற்றுக்கொண்டார். இவரின் உடன் பிறந்த சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகலை கவனித்துக்கொண்டு அவர்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவர் இளமையாக இருந்தாலும் கூட கிறிஸ்துவின் அப்போஸ்தலிக்க பணியை ஆர்வமுடன் ஆற்றினார். இவர்தான் வாழ்ந்த கிறிஸ்துவ வாழ்வை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.



இவர் பல கத்தோலிக்க பங்குத்தளங்களை உருவாக்கினார். இவர் பல கைவிடப்பட்டவர்களையும், தேவையிலிருப்போரையும், நோயாளிகளையும் இனங்கண்டு முன்வந்து உதவினார். அத்துடன் தன்னுடன் இறை இரக்க சபை சகோதரர்களையும் Barmherzige Brüder இணைத்துக்கொண்டு புதிய சபை ஒன்றை நிறுவினார்.21 ஜூன் 1850 ஆம் ஆண்டு டிரியர் ஆயர் இச்சபையை ஏற்றுக்கொண்டு, ஆசீர்வதித்து அங்கீகாரம் அளித்தார். பிறகு பல இடர்பாடுகளை சந்தித்தப்பிறகு 1851 ஆம் ஆண்டு கோப்லென்சிலும் அச்சபையை நிறுவினார்.

இச்சபையினர் மருத்துவர்களையும் தாதியர்களையும் உருவாக்கி நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இச்சபையின் பணியானது மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வளர்ந்து வந்ததால் பல வெளிநாடுகளுக்கு சென்று அச்சபையை வளர்த்தெடுத்தார். பல நாடுகளில் பயணம் செய்த போது, இவர் எலும்புறுக்கி என்ற நோயால் தாக்கப்பட்டார். இதனால் தன் உடலிலிருந்த சக்தியனைத்தையும் இழந்து, மிக மெல்லிய உடலுடன் இறந்தார். இன்று இவர் ஏற்படுத்திய சபையை இறை இரக்க சகோதரர்கள் வழிநடத்தி வருகின்றார்கள். 1888 ஆம் ஆண்டிலிருந்து டிரியர் நகரிலுள்ள சபையே தலைமை இல்லமாக செயல்படுகின்றது.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! தனது உழைப்பால் உயர்ந்து புதிய சபையை உருவாக்கி உம் புகழுக்காகவும் உம் மாட்சியில் பங்கு பெறவும் தன்னை அர்ப்பணித்த பீட்டர் ஃபிரீட்ஹோஃபனை நினைத்து நன்றி கூறுகின்றோம். இவரின் பரிந்துரையால் அவரால் நிறுவப்பட்ட சபையை இனிவரும் நாளிலும் உடனிருந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment