Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 9 December 2015

இன்றைய புனிதர் 2015-12-10 மெரிடா நகர் மறைசாட்சி ஓய்லாலியா Eulalia von Merida

                           

பிறப்பு 292, மெரிடா Merida, ஸ்பெயின்

இறப்பு 10 டிசம்பர் 304, மெரிடா

பாதுகாவல்: பயணிகள், விபத்துக்களிலிருந்து

இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, சிறந்து வளர்ந்த பெண்ணை ப்போல் காட்சியளித்தார். குழந்தையிலிருந்தே தனிமையாக சென்று செபித்து வந்தார். இப்பிள்ளையை கண்ட அரசன் தியோ க்ளின் செபம் செய்யக்கூடாது என்று அவருக்கு கட்டளையிட் டான். ஆனால் அக்குழந்தை அவனின் தீச்செயலை வெறுத்து மீண்டும் மீண்டும் தனிமையை நாடி செபித்து வந்தது. அனைவ ரும் வியக்கும் விதத்தில் அவரின் செபம் இருந்தது.

                             இவர் தனது 12 ஆம் வயதில் கிறிஸ்துவ மறையை பின்பற்றக்கூடாது என்ற கட்டளையை பெற்றார். அவர் இதை மீறியதால் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். கொடியவர்கள் அவர்கள் அனைவரையும் விசாரிக்க வந்தபோது, அனைவர் முன்னிலையிலும் "நான் ஓர் கிறிஸ்தவள்" என்று மிக தைரியமாக கூறினாள். இதனால் படைவீரர்கள் இவரை கொண்டு சென்று தனிமையான சிறையில் அடைத்தனர். அவரின் உயிருள்ள உடலின்மேல் இரும்பை காய்ச்சி சூடாக ஊற்றினர். அப்போதும் கூட அவரின் நாவு இறைவனை புகழ்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த படைவீரர்கள் அவரை அடுப்பிலிட்டு உயிரோடு எரித்துக்கொன்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! குழந்தை பருவத்திலேயே உம்மை இறுகப்பற்றிக்கொண்டு உமக்காக மறைசாட்சியாக மரித்து ஓய்லாலியாப் போல் ஒவ்வொரு குழந்தையும் பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து வளர உம் தூய ஆவியின் வரம் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment