Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 14 December 2015

இன்றைய புனிதர் 2015-12-14 மறைவல்லுநர் திருக்காட்சியாளர் சிலுவை அருளப்பர் Johannes von Kreuz

                                         

பிறப்பு 24 ஜூன் 1542, ஃபொண்டிவேரோஸ் Fontiveros, ஸ்பெயின்

இறப்பு 14 டிசம்பர் 1591, உபேடா Ubeda, ஸ்பெயின்

புனிதர்பட்டம்: 26 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
மறைவல்லுநராக: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவரின் தந்தை ஓர் அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரின் தாய் ஓர் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இதனால் தந்தையும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவராகவே வாழ்ந்தார். அருளப்பர், தன் தந்தை செய்து வந்த கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டு, தன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அதன்பிறகு இவர் தாதியர் கல்வியைக் கற்றுக்கொண்டு மெடினா டெல் காம்போ (Medina del Campo) என்ற மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன் பணியின் போது நோயாளிகளின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டுப்பணியாற்றினார். தான் காட்டிய அன்பாலே பல நோயாளிகள் விரைவில் குணமடைந்தனர்.

இவர் தான் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே, இயேசு சபையில் தத்துவயியலைக் கற்றார். இவர் 1563 ஆம் ஆண்டின் இடையில் இவரின் 21 ஆம் வயதில் மெடினாவில் இருந்த கார்மேல் சபையில் சேர்ந்து புனித மத்தியாசிடமிருந்து சகோதரர் யோஹான்னஸ் என்ற பெயரைப் பெற்றார். இவர் தனது இறையியல் மற்றும் தத்துவயியல் படிப்பை முடித்தபின் சலமான்கா (Salamanca) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்குதான் அவர் 1568 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு உடனே அவர் அச்சபையிலிருந்து வெளியேறி கர்தாய்சர் (Kartäuser) என்றழைக்கப்படும் துறவற சபையில் சேர்ந்தார். அங்கு அவர் பல விதங்களில் சோதனைக்குப்பட்டார்.

அச்சமயத்தில்தான் அருளப்பர் திருக்காட்சியாளர் அவிலா தெரசாவை சந்தித்தார். அவரின் உதவியாலும் வழிநடத்துதலாலும் தன் சோதனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சபையின் வளர்ச்சிக்காக உழைத்தார். கடும் உழைப்பாலும் எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். அப்போது 1582ல் அவிலா தெரசா இறந்து போனதால் சீர்திருத்தப்பணிகள் அனைத்தையும் தனி மனிதனாக இருந்து செய்துவந்தார். பின்னர் 1588 ஆம் ஆண்டு கார்மேல் மடத்தை தனியொரு மடமாக பிரித்து வழிநடத்தினார். அச்சமயத்தில் மிக நோய்வாய்ப்பட்டிருந்த சிலுவை அருளப்பர் தன் சக்தியை இழந்தவராய் இறந்தார்.

இவர் இறந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவரின் உடல் செகோவியாவிற்கு (Segovia) எடுத்துச் செல்லப்பட்டது. இப்புனிதரின் உடல் இன்று கார்மேல் டெஸ்கால்சோஸ் (Carmelitas Descalzos) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் வைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவர் எழுதிய ஆன்மீக நூல்கள் புனித வாழ்விற்கும் அறிவாழத்திற்கும் இன்றும் சான்று பகர்ந்து விளங்குகின்றது


செபம்:
நிறைவாழ்வை வழங்கும் எம் தந்தையே! தம்மை முற்றிலும் ஒறுத்து சிலுவையை நேசித்து வாழும் பேற்றை குருவாகிய சிலுவையின் புனித அருளப்பருக்கு நீர் அளித்தீர். இவருடைய முன்மாதிரியை நாங்கள் கடைபிடித்து உமது முடிவில்லா மாட்சியை கண்டுகளிக்க வரம் தாரும்.

No comments:

Post a Comment