Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 13 December 2015

இன்றைய புனிதர் 2015-12-13 மறைசாட்சி லூசியா

                                       

பிறப்பு 286,சிசிலி Sizilien, இத்தாலி

இறப்பு 304,சிராக்குஸ் Syrakus

பாதுகாவல்: பார்வையற்றோர், நோயுற்ற குழந்தைகள், விவசாயிகள், கண்ணாடி,இரும்பு,கத்தி,கதவு தயாரிப்போர், எழுத்தாளர்கள், வக்கீல், கண்நோயிலிருந்து, கழுத்து வலியிலிருந்து, இரத்தப்போக்கிலிருந்து.

இவர் குழந்தையாக இருக்கும்போது, எவரும் அறியாத வண்ணம் கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டார். இவரின் இளமைப்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். திருமணம் நடக்கவிருந்த அந்நாளில் தன் கற்பை காக்கும்படி இடைவிடாமல் மிக உருக்கமாக செபித்தார். கடவுளும் அவரின் மன்றாட்டை ஏற்று வரமருளினார். அப்போது லூசியாவின் தாய் நோயால் துன்பப்பட்டார். இதனால் லூசியா தன் தாய் குணமடைய வேண்டுமென்று மீண்டும் செபித்து பலனை அடைந்தார்.

இவரின் விசுவாசத்தைக்கண்ட அரசன் தியொக்ளேசியன் லூசியாவை பிடித்துச் சென்று மிரட்டினான். இருப்பினும் லூசியாவின் உதடுகள் மட்டும் செபித்துக்கொண்டே இருந்தது. இதனால் கோபமற்ற அரசன் அவரை வீட்டு விலங்குகளை பராமரிக்கும் கடுமையான பணிகளை கொடுத்தான். அப்போதும் கூட லூசியா தன் பணிகளை மகிழ்ச்சியோடு செய்து பின்னர் தெருவிற்கு சென்று, பார்ப்போரை எல்லாம் தன்னுடன் அழைத்து, செபத்தில் ஆழ்த்தினார். இதனால் கோபமடைந்த அரசன் கொதிக்கும் எண்ணெயை அவரின் மீது ஊற்றினான். அப்போதும் கூட அவரின் உடலில் சிறு காயமும் ஏற்படாமல் கடவுள் அவரை காத்தார். இதனால் அரசன் ஆத்திரமடைந்து, அவரை ஈட்டியால் குத்திக் கொல்லும்படி கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படி லூசியா ஈட்டிகளின் அம்பிற்கு இரையாகி, மறைசாட்சியாக உயிர்நீத்தார். இவரின் உடல் சிராக்குசில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு அவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.


செபம்:
அன்பான ஆண்டவரே! நீரே எம் அரண்; நீரே எம் கேடயம். நற்செய்தியின் பொருட்டு துன்புறும் மக்களை நீர் நினைவுகூரும். உம் இரக்கத்தை அவர்களின் மீது பொழிந்து காத்தருளும், நீர் கூறும் நற்செய்திகளைக்கேட்டு நாளும் நீர் காட்டும் வழியில் எம் வாழ்வை செலுத்து வழிகாட்டி எம்மை நடத்திட வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment