Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 30 December 2015
இன்றைய புனிதர் 2015-12-30 மறைசாட்சி ஸ்போலேட்டோ நகர் சபினுஸ் Sabinus von Spoleto
பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,இத்தாலி
இறப்பு 303, ஸ்போலேட்டோ, இத்தாலி
பாதுகாவல்: சியென்னா, அசிசி, ஃபெர்மோ Fermo இவர் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துவை பின்பற்றினார். கிறிஸ்துவை பற்றி பல நாடுகளில் போதித்தார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள அசிசி ஸ்போலேட்டோவில் ஆயராக இருந்தார் என்று கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் அளவிற்கு மிகப் பெரிய அரும் பணிகளை புரிந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய செய்திகள் அதிகம் அறியப்படாத நிலையில் கிறிஸ்துவை பின்பற்றியதற்காக இவர் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. ஏறக்குறைய 5 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஸ்போலேட்டோவில் பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பின்னர் ராவென்னா நகரிலும் இவருக்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது.
செபம்: இயேசுவே இறைமகனே! நீர் உம் மக்களை அற்புதமான முறையில் படைத்துள்ளீர். நீர் என்றும் மாறாதவர், உம் அன்பு என்றும் மறையாதது என்பதை இன்றைய புனிதரின் வழியாக வெளிப்படுத்துகின்றீர். உம்மை நாங்கள் எங்கள் வாழ்வின் எச்சூழலிலும் ஏற்று, உமது சாட்சிகளாக வாழ வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment