Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 28 December 2015

இன்றைய புனிதர் 2015-12-28 கஸ்பார் டெல் பூஃப்லோ Kaspar del Buflo

                            

பிறப்பு  6 ஜனவரி 1786, உரோம், இத்தாலி

இறப்பு 28 டிசம்பர் 1837, உரோம்

முத்திபேறுபட்டம்: 1905, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 12 ஜூன் 1954, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் உரோம் அரசர் மாளிகையில் பிறந்தார். இவரின் தந்தை அரசர் குடும்பத்தில் சமையல் கலையை ஆற்றிவந்தார். இவ ரின் தாய் குழந்தைகளை கவனித்து அவர்களை சிறந்ததோர் கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார். கஸ்பார் குழந்தைப்ப ருவத்திலேயே நோயால் தாக்கப்பட்டார். இதனால் மற்ற குழந் தைகளுடன் சேர்ந்து விளையாடுவதிலும், பழகுவதிலும் விரு ப்பமின்றி வாழ்ந்தார். ஆனால் வாய்ப்பு இருக்கும்போதெல் லாம் உரோமில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செபித்து வந்தார். புனிதர்களின் படத்தை பார்க்கும்போது அவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இவர் புனிதர்படங்களை பார்க்கும்போது புனித அலோசியஸ் கொன்சாகா மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியாரால் ஈர்க் கப்பட்டார். அவர்களை போலவே வாழ வேண்டுமென்று விருப்பம் கொண்டார். அவர்களின் வரலாற்றைப் படித்து தன் வாழ்வை அவர்களை போலவே மாற்றினார். நாளடைவில் இவர் "சிறிய அலோசியஸ்" என்றழைக்கப்பட்டார்.

இவர் தனது கல்வியை உரோமையர்களின் அரசப்பள்ளியில் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது மிகத் திறமையுடன் முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்று வந்தார். அப்போது தான் ஒரு மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று விரும்பினார். இதனால் பங்கு ஆலயத்திற்கு சென்று மறையுரை ஆற்றினார். இவரின் மறையுரை மக்கள் மனதில் நெருப்பு பற்றி எரிந்தது. சிறிய அலோசியஸ் அனைவரின் இதயத்தையும் இறைவன்பால் திருப்பினார். இவரின் மறையுரையை கேட்டவர்கள் எவராக இருந்தாலும் மனமாறி இறைவனை பின்செல்லாமல் போகவில்லை. அந்த அளவிற்கு வலிமையான மறையுரைகளை ஆற்றினார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இவரின் மறையுரையை எளிதாகப் புரிந்தனர். இவ்வாறு மறையுரையின் வழியாக அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்தார்.

அச்சமயத்தில் 1808 ஆம் ஆண்டு நெப்போலியன் அதிகாரம் உரோமையில் நுழைந்தது. பிரான்சு நாட்டு அரசரால் அப்போதைய திருத்தந்தை எரித்துக்கொல்லப்பட்டார். குருக்களையும் பிடித்து சிறையிலடைத்தனர். அப்போதுதான் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆனால் இவரும் பிரெஞ்சுக்காரர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் பொலோஞ்யா கொண்டுச் செல்லப்பட்டு வெடி பட்டாசின் நடுவே அமர்த்தப்பட்டு வதைக்கப்பட்டார். பிறகு 1814 ஆம் ஆண்டு நெப்போலியனிடமிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு மறைபரப்பு பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் திருத்தந்தை அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் இத்தாலி முழுவதும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார்.

பின்னர் 1815 ஆம் ஆண்டு திருஇரத்த சபை Missionare vom Kostbaren Blut என்றதோர் சபையை நிறுவினார். இச்சபையினர் ஆரம்ப காலத்தில் மறைபரப்பு பணியையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்ப்பணிகளையும் செய்தனர். பின்னர் உரோம் திரும்பி மீண்டும் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்தேறிய வண்ணமாக இருந்தது.


செபம்:
வரங்களை பொழிபவரே எம் இறைவா! சிறிய அலோசியஸ் என்றழைக்கப்பட்ட புனித கஸ்பாரை எம் முன்னோர்களுக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரை போல இறைபணியில் ஆர்வம் கொண்டு செயல்பட ஒவ்வொரு மறைப்பணியாளர்களுக்கும் ஊக்கமூட்டும். சிறப்பாக குருக்களை நீர் உமது ஆவியின் வரங்களால் நிரப்பும். நீர்தாமே அவர்களின் மறையுரையின் வழியாக மக்களிடம் உம்மை அறிவிக்கச் செய்தருளும். உலக சோதனைகளிலிருந்து விடுபட்டு, உம்மை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று, தந்தை இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment