Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 18 December 2015
இன்றைய புனிதர் 2015-12-18 குரு உன்னிபால்டு Wunibald OSB
பிறப்பு701,வேசெக்ஸ் Wessex, இங்கிலாந்து
இறப்பு 18 டிசம்பர் 761,ஹைடன்ஹைம் Heidenheim, ஜெர்மனி
பாதுகாவல்: கட்டிடத்தொழிலாளிகள், திருமண இணையர் இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவ ரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒரு சிலர் புனிதர்ப ட்டம் பெற்றுள்ளனர். இவர் ஏறக்குறைய 720 ஆம் ஆண்டு தன் தந்தையுடனும், சகோதரருடனும் உரோம் நகருக்கு திருயாத் திரை சென்றார். பின்னர் அங்கிருந்து புனித நாட்டிற்கு சென் றார். அங்கிருந்து திரும்பி இத்தாலி வந்தடைந்தபோது தான், தான் ஒரு குருவாக வேண்டுமென்று தந்தையிடம் விருப்ப த்தை தெரிவித்து, இத்தாலி நாட்டிலுள்ள மோண்டேகசினோவி லிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் அவரின் மாமா, ஜெர்மனி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக் கப்பட்ட போனிபாஸ் விடுத்த அழைப்பின்பேரில் ஜெர்மனி நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
இவர் ஜெர்மனியில் 738 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று, மறைபரப்பு பணிக்காக பவேரியாவிற்கும் தூரிங்கன்Thüringen நாட்டிற்கும் அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பின் அங்கிருந்து மைன்ஸ் Mainz நகருக்கு திரும்பிவந்து4 ஆண்டுகள் மறைப்ப ணியை ஆற்றினார். அதன்பிறகு 751 அல்லது 752 ஆம் ஆண்டின் இறுதியில் ஐஷ்டாட்டில் Eichstatt இருந்த ஹைடன்ஹைம் என்ற மறைமாவட்டத்தை நிறுவினார். அதன்பிறகு 741 ஆம் ஆண்டு தன் சகோதரர் வில்லிபால்டு Wiilibald ஆயராக இருந்தார். அவர் தான் சில ஆண்டுகள் கழித்து பெனடிக்ட் துறவற சபையை வழிநடத்தினார். பின்னர் அவரின் உதவியுடன் உன்னிபால்டு பெண்களுக்கான பெனடிக்ட் துறவற சபையை வழிநடத்தினார். பிறகு மிகப்பெரிய கலாச்சார மறைபரப்பு பணியகம் ஒன்றை நிறுவி அதையும் தொடர்ந்து வழிநடத்தினார். இவ்வாறு பல்வேறு வழிகளில் மறைபரப்புப்பணியை ஆற்றிய இவர், பெனடிக்ட் துறவற சபையிலேயே இறந்தார். சில ஆண்டுகள் கழித்து இவரின் கல்லறை மேல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்வாலயம் 1483 ஆம் ஆண்டிற்குப் பின் பிறஇன சபைச்சகோ தரர்களின் ஆலயமாக மாற்றப்பட்டது.
செபம்: அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத்தந்தையே! அருள்தந்தை உன்னிபால்டை நீர் இவ்வுலகில் படைத்து எமக்கு கொடையாக தந்தீர். இவரின் வழியாக உம் கைவேலைப்பாட்டை மெருகூட்டினீர். புனித பெனடிக்ட் சபையை மேன்மேலும் வளர்த்தெடுத்தீர். இச்சபையின் மூலம், உம் இறைப்பணியை இவ்வுலகில் வாழ வைத்தீர். தொடர்ந்து உமது இரக்கத்தை அச்சபையினர் மீது பொழிந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
No comments:
Post a Comment