Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 9 December 2015

இன்றைய புனிதர் 2015-12-09 பேதுரு ஃபோரியர் Petrus Fourier

                                               

பிறப்பு 30 நவம்பர் 1565,லோத்ரிங்கன் Lothringen, பிரான்ஸ்

இறப்பு9 டிசம்பர் 1640,கிரே Gray, பிரான்ஸ்

முத்திபேறுபட்டம்: 1730

புனிதர்பட்டம்: 7 மே 1897, திருத்தந்தை 13 ஆம் லியோ

இவர் தனது 20 வயதில் 1589 ஆம் ஆண்டு டிரியரிலுள்ள சிமி யோன் ஆலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு தான் பிறந்த ஊரின் பக்கத்து ஊரிலேயே மறை ப்பணிக்காக அனுப்பப்பட்டார். இவர் அவ்வூரில் முதல் திருப் பலி நிறைவேற்றிய போது ஆற்றிய மறையுரையால் பலர் மனந்திரும்பி, உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக மாறினர். இவர் ஊர் ஊராக கால்நடையாகவே சென்று மறைப்பணியா ற்றினார். இவர் குருவான சில ஆண்டுகளிலேயே பல பங்கு களை உருவாக்கினார். ஒவ்வொரு ஊர்களிலும் தவறாமல் திருப்பலியை நிறைவேற்றினார்.
                                                                     இவர் இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்தார். இளைஞர்களை பராமரிப்பதற்கென்று 1597 ஆம் ஆண்டு சபை ஒன்றை தொடங்கினார். இச்சபையானது தொடங்கிய 25 ஆண் டுகளில் உலகம் முழுவதும் பரவியது. இச்சபையை திருத் தந்தை 5 ஆம் பவுல் துறவற சபையாக அறிவித்து அங்கீகாரம் அளித்தார். மிக சிறப்பாக பணியாற்றிய இவர் சிறந்த குரு என்றழைக்கப்பட்டு புகழப்பட்டார்.
செபம்:
நன்மைகளின் ஊற்றே எம் இறைவா! பேதுரு ஃபோரியர் சிறந்த குருவாக பணியாற்றி இளைஞர்கலை வளர்த்தெடுத்ததைப் போல எம் குருக்களும் இளைஞர்களின்பால் அக்கறைக்கொ ண்டு வாழ உதவி செய்தருளும். சிறந்த குருக்களாக வாழ்ந்து என்றும் உமக்கு சான்று பகர்ந்திட செய்தருளும்.

No comments:

Post a Comment