Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 6 March 2016

இன்றைய புனிதர் 2016-03-07 மறைசாட்சியர் புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசிடாஸ் Perpetua und Felicitas


                               

                    இன்றைய புனிதர் 2016-03-07
மறைசாட்சியர் புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசிடாஸ் Perpetua und Felicitas

பிறப்பு 2 ஆம் நூற்றாண்டு,கர்த்தாகோ(?), துனேசியன்

இறப்பு 7 மார்ச், 202 (?). கர்த்தாகோ Karthago, Tunesien

பெலிசிடாஸ் ஓர் அடிமைப்பெண்ணாக இருந்தார். பெர்பெத்துவா ஓர் பக்தியுள்ள குடும்பத்தில் வளர்ந்தவர். இவர்கள் இருவரும் கர்த்தாகோவில் இருந்த காட்டேகுமெனனும் Katechumenen அடிமைப்படுத்தப்பட்டார்கள். அங்கு திருமுழுக்கு பெறுவதற்கு தயாரிக்கும் பணியையும் செய்து வந்தார்கள், இவர்கள் அப்பணியை தொடர்ந்தாற்றக் கூடாதென அரசன் செப்டிமுஸ் சேவேரூஸ் Septimus Severus தடைவிதித்தான். ஆனால் இவர்கள் அத்தடையை எதிர்த்து தொடர்ந்து மறைக்கல்வியை கற்பித்தனர். இதனால் அரசன் வெகுண்டெழுந்து கோபம் கொண்டான். இருவர் மேலும் வெடிமருந்தை வைத்து, பட்டாசுகள் எரிந்து கொல்லும்படி ஆணையிட்டான்.

அரசன் இவ்விருவரையும் கொல்வதற்குக் கொண்டு சென்ற வழியிலும், இப்புனிதர்கள் போதித்து திருமுழுக்கை வழங்கினர். இதனால் அரசன் இன்னும் கோபம் கொண்டான். அரசன் இவ்விருவரையும் மிகக் கொடுமையாக தீர்ப்பிட்டு கொன்றான். இம்மறைசாட்சியரின் சாவு பற்றிய மிக விறுவிறுப்பான வரலாறு இன்றளவும் உள்ளது.


செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவரே! மறைசாட்சியரான புனிதர்கள் பெர்பெத்துவாவும், பெலிசிட்டாசும் உமதன்பினால் ஆட்கொள்ளப்பட்டு தங்களை வாட்டி வதைத்தவர்களை எதிர்த்து நின்று இறப்பின் வேதனையை வெற்றி கொண்டார்கள். இப்புனிதர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசுவதின் வழியாக, நாங்கள் எந்நாளும் உம்மை அன்பு செய்ய செய்தருளும்.

No comments:

Post a Comment