Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 11 March 2016
இன்றைய புனிதர் 2016-03-12 கன்னி ஃபீனா Fina
இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். ஒருவேளை உணவு கூட வயிறார உண்ணமுடியாத அளவிற்கு ஏழ்மையாக வாழ்ந்தவர். அவ்வாறு இருந்தபோதிலும், தன்னிடம் உள்ள உணவில் சிறிதளவை மற்ற ஏழைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தார். இவர் நோயால் தாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். தாங்கமுடியாமல் நோயால் துடித்தபோதும், பொறுமையை இழக்காமல், இறைவனை இறுக பற்றி வாழ்ந்தார். தான் பெறும் வலிகளை இறைவனுக்காக அனுபவிக்கிறேன் என்று புன்னகையோடு ஏற்றார். இவர் வாழும் போதே புனிதர் என்று போற்றப்பட்டார். இவர் தனது இறுதி நாட்களை சான் கிமிக்னானோவில் இருந்த பேராலயத்தில் கழித்தார். இவர் இறந்தபிறகும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். அப்பேராலயத்தின் அருகில் இவர் பெயரில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment