Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 17 March 2016

இன்றைய புனிதர் 2016-03-18 ஆயர் மறைவல்லுநர் எருசலேம் நகர் சிரில் Cyrill von Jerusalem

                   
                  இன்றைய புனிதர் 2016-03-18
ஆயர் மறைவல்லுநர் எருசலேம் நகர் சிரில் Cyrill von Jerusalem

பிறப்பு 315, எருசலேம்

இறப்பு 18 மார்ச் 386, எருசலேம்

இவர் ஓர் கிறிஸ்துவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். எருசலேமின் மறைமாவட்டத் தலைமைக்கோலிலில் மாக்சிமுஸ்சிற்கு Maximus அடுத்து 350 ஆம் ஆண்டு ஆயரானார். கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை தவறாகப் புரிந்து கொண்ட ஆரியுசின் ஆதரவாளர்களோடு நிகழ்ந்த விவாதங்களில் புனிதர் சிக்கவைக்கப்படு பன்முறை நாடு கடத்தப்பட்டார். கலப்படமற்ற போதனையையும் விவிலியத்தையும் பாரம்பரியங்களையும் அவர் மெய்யடியார்களுக்கு விளக்கிக் காட்டிய உரைகள் எல்லாம் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்குச் சான்று பகர்கின்றன.

செபம்:
எம் தந்தையாம் ஆண்டவராகிய கடவுளே! புனித சிரில் உம் அருளால் உம் திருச்சபையை திருமுழுக்கு நற்கருணை என்னும் மறைப்பொருளின் ஆழமான புரிதலுக்கு இட்டுச் சென்றார். அவருடைய வேண்டலின் பயனாக நாங்கள் உம் மகனை மேன்மேலும் நன்கறிந்து ஆன்மீக வாழ்வை மிகுதியாகப் பெற்று கொள்ளச் செய்தருளும்.

No comments:

Post a Comment