Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 30 March 2016

இன்றைய புனிதர் 2016-03-31 சபைத்தலைவர் கிளமென்ஸ் பூல் Clemens Fuhl

                            
                   இன்றைய புனிதர் 2016-03-31
சபைத்தலைவர் கிளமென்ஸ் பூல் Clemens Fuhl

பிறப்பு 18 ஜூன் 1874, ஐட்ஹவுசன் Aidhausen, பவேரியா

இறப்பு 31 மார்ச் 1935, லா பாஸ் La Paz, பொலிவியன்

இவர் மிக சாதாரணமான வாழ்வை வாழ்ந்து வந்தார். தன் சபை வளர்வதற்காக கடினமாக உழைத்தார். தனது19 ஆம் வய திலேயே குருப்பட்டம் பெற்று துறவியானர். 1920 ஆம் ஆண்டு ஏழ்மையான வாழ்வை தேர்ந்து கொண்டு, ஆன்ம குருவாக பணியாற்றினார். பிறகு 1929 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபை யின் மறைமாநிலத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் னர் 1931 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தென் அமெரிக்காவில் தன் சபைகளை பார்வை யிட சென்ற போது, பயணத்தின்போது நுரையீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டார். அந்நோயை குணமாக்க முடியாமல் இற ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1953 ஆம் ஆண்டு அங்கிருந்து வூர்ட்ஸ்பூர்க்கில் உள்ள புனித அகஸ்டின் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, மரியாதை செலுத்தப்ப ட்டுவருகின்றது.

செபம்:
பேரருள் சுடராம் ஆண்டவரே! நீர் எங்களை ஒளியின் மக்களாக வாழும்படி உருவாக்கினீர். உண்மையின் ஒளியில் எப்போதும் நாங்கள் வாழும் பொருட்டு, தவறென்றும் இருளில் நாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும், உமது ஒளியின் பாதையில் எம் கால்களை நடக்கச் செய்தருளும். துறவி கிளமென்ஸ் போல எளிமையான வாழ்வை வாழச் செய்தருளும். எம் திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்து மரிக்க வரம் தாரும். உம் மக்களுக்காக நாங்கள் எம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ நல்லுள்ளம் தாரும்.

No comments:

Post a Comment