Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 25 March 2016
இன்றைய புனிதர் 2016-03-26 ஆயர் லியூட்கர் Liudger
இவர் ஓர் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். 777 ஆம் ஆண்டு கொலோனில் தனது குருப்பட்டம் பெற்றார். பிறகு சாக்சன் சென்று மறைப்பணியாற்றினார். தான் ஆயராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு முன்ஸ்டரில் பேராலயம் ஒன்றை கட்டினார். அத்துடன் சில ஆலயங்களையும் எழுப்பினார். ஏறக்குறைய 40அருட்தந்தையர்களைக் கொண்டு பல துறவற மடங்களை யும் கட்டினார். 40 பங்குகளையும் உருவாக்கினார். சில பெனடிக்ட்டீனர் துறவற மடங்களையும் கட்டினார். இவர் ஒருமுறை திருப்பலியில் மறையுரையாற்றிக் கொண்டிரு க்கும் வேளையில் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்தார். இவர் பல துறவற இல்லங்களில் ஆன்ம குருவாக பணியாற்றி னார். இன்றும் முன்ஸ்டர் மறைமாவட்டத்தில் இவருக்கென்று தனி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment