Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 23 March 2016

இன்றைய புனிதர் 2016-03-24 ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா Katharina von Schweden

                           
                 இன்றைய புனிதர் 2016-03-24
ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா Katharina von Schweden

பிறப்பு 1331 ஸ்வீடன்

இறப்பு மார்ச் 1381, வாட்ஸ்டேனா Vadstena, ஸ்வீடன்

பாதுகாவல் : குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள்

இவர் பிரிகிட்டா Brigitta, உல்ஃப் Ulf என்பவரின் மகளாகப் பிறந்தார். தனது 14 வயதிலேயே எக்கார்ட் Eggartஎன்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் திருமணம் ஆனபிறகும் தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ வேண்டுமென்று தங்களுக்குள் முடிவெடுத்தனர். இருவரும் சேர்ந்து கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அப்போது மிரிகிட்டாவின் தாய் 1349 ஆம் ஆண்டு உரோம் சென்று அங்கு ஓர் சபையை நிறுவினார். கத்தரீனா 20 வயதிலிருக்கும் தன் கணவர் இறந்துவிட்டார். இதனால் கத்தரீனாவும் உரோம் சென்று தன் தாய்க்கு உதவினார். இவர் தான் வாழும் வரை தன் தாயுடன் வாழ்வதாக உறுதி செய்தார். கத்தரீனாவும், தாயும் சேர்ந்து 1372 மற்றும் 1373 ம் ஆண்டுகளில் புனித நாட்டிற்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது 1373 ஜூலை 23 ல் தாய் இறந்துவிட்டார். கத்தரீனா தன் தாயின் உடலை ஸ்வீடனில் உள்ள வாட்ஸ்டேனாவிற்கு Vadstena கொண்டு சென்று அடக்கம் செய்தார். அதன்பிறகு கத்தரீனா தனது 30 ஆம் வயதில் துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அத்துறவற மடத்தையே தன் வீடாகக் கொண்டார். நாளடைவில் இவரே அம்மடத்தின் தலைவியாகவும் பொறுப்பேற்றார்.


செபம்:
வார்த்தை மனுவுருவானவரே! எம்மை உமது இறைவார்த்தைகளால் நிரப்பியருளும். இறைவார்த்தைகளை எம் உள்ளத்தில் உள்வாங்கி அவற்றின் படி நடக்கச் செய்தருளும். நாங்கள் கொடுத்துள்ள கற்பு என்னும் வார்த்தைப்பாட்டில் இறுதிவரை பிரமாணிக்கமாய் வாழச் செய்தருளும், இதன் வழியாக உமது மேலான வியத்தகு மறைப்பொருளை மனிதர்களுக்கு எடுத்துரைக்க உதவி புரியும். எம்வாழ்வில் தொடர்ந்து உம்மை வழிபடவும், உம்மீது பற்றுக்கொண்டு, இன்றைய புனிதரைப் போல, இறுதிவரை உமக்காகவும் வாழ செய்தருளும்.

No comments:

Post a Comment