Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 21 March 2016

இன்றைய புனிதர் 2016-03-22 காலன் நகர் கர்தினால் கிளமென்ஸ் அகுஸ்ட் கிராஃப் Clemens August Graf von Galen

                  
                 இன்றைய புனிதர் 2016-03-22
காலன் நகர் கர்தினால் கிளமென்ஸ் அகுஸ்ட் கிராஃப் Clemens August Graf von Galen

பிறப்பு 16 மார்ச் 1878, பூர்க் டின்க்லாக Burg Dinklage,  நீடர்சாக்சன் Niedersachsen

இறப்பு 22 மார்ச் 1946, முன்ஸ்டர் Münster, ஜெர்மனி

இவரின் தந்தை பெர்ட்னாண்ட் ஹெரிபெர்ட் Ferdinand Heribert. தாய் எலிசபெத் என்பவர் ஆவர். இவர் 11 வது குழந்தையாக பிறந்தவர். இவரின் உடன் பிறந்தவர்கள் 12 பேர். இவரின் பெற் றோர் செல்வந்தர். இவர் தனது இளம்வயது கல்வியை முடித் தப்பின், தன் சகோதரர் பிரான்ஸ் என்பவருடன் இணைந்து 1897 ல் பிரைபூர்க்கில்Freiburg மேற்படிப்பிற்காக சென்றார். இவர் 1898 ல் உரோம் நகருக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப் போது திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களின் உதவியினால் குருவாக ஆசைக்கொண்டு குருமடத்தில் சேர்ந்தார். 28 மே 1904 ஆம் ஆண்டு காலனில் உள்ள பேராலயத்தில் தனது குருப்பட் டம் பெற்றார். 2வருடங்கள் பேராலயத்தில் பணியாற்றினார். 1906 ல் பெர்லினிலுள்ள ஸ்சோன்பெர்க் Schönberg என்ற ஊரிலி ருந்த மத்தியாஸ் ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

பின்னர் 1912 ல் பெர்லினிற்கு மாற்றப்பட்டார். அங்கு கிளமென்ஸ் St.Clemens ஆலயத்தில் பணியாற்றினார்.1919 - 1929 வரை மீண்டும் புனித மத்தியாஸ் ஆலயத்தில் பணியாற்றினார். பின்னர் செயிண்ட் லம்பெர்டிLamberti ஆலயத்தில் பங்கு தந்தை யாக பணிபுரிந்தார். 27 ஆண்டுகள் அங்கு ஆன்ம குருவாகவும் இருந்தார். பிறகு 1933 ல் முன்ஸ்டர் மறைமாவட்டத்திற்கு ஆய ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகச் சிறப்பான முறையில் மறையுரை ஆற்றும் திறமை கொண்டவர். தவறுகளை கண்டி த்து எவருக்கும் அஞ்சாமல் மறையுரை ஆற்றுபவர். இவர் கரு ணைக்கொலையை Euthanasie பற்றி மிகச் சிறப்பான விவாதங் களை மேற்கொண்டார். அதற்குப் பிறகு இவரின் பெயர் எத்தி சையிலும் பேசப்பட்டது. இவர் சோசலிசத்தை கடுமையாக எதி ர்த்தார். இதனால் இவர் சாக வேண்டுமென்ற தண்டனையைப் பெற்றார். இவர் மீது பல பொய்குற்றங்கள் சுமத்தப்பட்டது,. இத னால் சில வாரங்கள் ஆயர் பதவியிலிருந்து விலக வேண்டிய தாயிற்று. பிறகு மீண்டும் 1945 ஆம் ஆண்டின் இறுதியில் 1946 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் காலனிற்கு Galen கர்தினாலாக தேர்ந்தெடுத்தார். 1946 ல் 21 பிப்ரவரி மாதம் உரோமில் தனது கர்தினால் பட்டத் தைப் பெற்றார். இவரின் கர்தினால் பட்டமளிப்பு விழாவிற்கு ம்யூனிக்கிலிருந்துMünchen மட்டுமே 20,000 மக்கள் சென்றனர். பின்னர் முன்ஸ்டரில் மிகப் பிரமாண்டமான முறையில் இவ ரின் பதவியேற்பு விழா சிறப்பிக்கப்பட்டது. இவ்விழா முடிந்த ஆறு நாட்கள் கழித்து அப்பண்டிசைட்டிஸ் Apendixஎன்ற நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இவரின் உடல் லியூட்கர் Liudger ஆலயத்தில் புதைக்கப்பட்டது.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! தவறுகளை கண்டிக்கும் தைரியத்தையும் எதிர்த்து போராடத் துணிவையும் கர்தினால் கிளமென்ஸிற்கு அளித்தீர். நாங்களும் தவறுகளை கண்டு ஒதுங்காமல் அவற்றைத் தட்டி கேட்கும் தைரியத்தை பெற உதவியருளும். உம் மக்களை நீதியோடும் நேர்மையோடும் வழிநடத்த வரம் தாரும்

No comments:

Post a Comment