Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 9 March 2016

இன்றைய புனிதர் 2016-03-09 திருக்காட்சியாளர், சபை நிறுவுநர் பிரான்சிஸ்கா ரோமானா Franziska Romana

                       
                   இன்றைய புனிதர் 2016-03-09
திருக்காட்சியாளர், சபை நிறுவுநர் பிரான்சிஸ்கா ரோமானா Franziska Romana

பிறப்பு 1384, ரோம்

இறப்பு 9 மார்ச் 1440, ரோம்

புனிதர்பட்டம் : 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல் : உரோம், பெண்கள், கார் ஓட்டுநர்

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது 11 ஆம் வயதில் துறவற இல்லத்திற்கு சென்றார். இவர் துறவறத்திற்கு செல்லக்கூடாது என்று இவரின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். லோரன்ஸோதே போசியானீ (Lorenzo de Ponziani) என்பவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இதனால் இவர் தான் என்ன செய்வதென்று அறியா நிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 40 ஆம் வயதில் 6குழந்தைகளுக்கு தாயானார். இவர் கணவர் இவருடன் 12 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பிறகு 1436 ல் இறந்துவிட்டார். அதன்பிறகு பிரான்சிஸ்கா சபை ஒன்றை நிறுவினார். கைவிடப்பட்ட பெண்கள் பலர் இச்சபையில் சேர்ந்தனர். இவர்கள் பல ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தனர். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான இளம்பெண்களும் இச்சபையில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் கீழ்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டை பெற்று துறவற வாழ்வை வாழ்ந்தனர்.

பிரான்சிஸ்கா தன் சபையை வழிநடத்த எப்போதும் தனது காவல் தூதரிடம் மன்றாடினார். அவரிடமிருந்து பலமுறை திருக்காட்சிகளைப் பெற்று அதன்படி தன் சபையை வழிநடத்தினார். இவர் இறந்த பிறகு இவரின் உடல் மரியா நூவோவா என்றழைக்கப்பட்ட ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
அன்பின் இறைவா! உம்மீது கொண்ட ஆர்வம் புனித பிரான்சிஸ்கா ரோமானாவின் உள்ளத்தில் பற்றி எரிந்தது. இதனால் அவர் தான் திருமனம் செய்தபின்னரும் கூட உம்மை இறுகப்பற்றி வாழ்ந்தார். உம் நற்செய்தியைப் பரப்பி ஓர் சபையையும் தோற்றுவித்தார். தந்தையே! இன்றைய காலக்கட்டத்தில் இல்லற வாழ்வை வாழும் பெண்களை ஆசீர்வதியும். தன் இல்லற வாழ்வின் மத்தியிலும் உம்மைப் பற்றிக் கொண்டு, இறையுறவில் தன் குடும்பத்தை வளர்க்க வரம் தாரும்.

No comments:

Post a Comment