Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 28 March 2016

இன்றைய புனிதர் 2016-03-28 துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab


                       இன்றைய புனிதர் 2016-03-28
               துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab

                               

பிறப்பு 5 நவம்பர் 1885, டான் Dahn, ஜெர்மனி

இறப்பு 28 மார்ச் 1935, ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு

கார்ல் என்பது இவரின் திருமுழுக்கு பெயர். இவர் நேஷனல் சோசலிசத்தை (Nationalsozialismus) எதிர்த்து போரிட்டார். 1932 ஆம் ஆண்டு ஆடோல்ஃப் ஹிட்லரை எதிர்த்து கடிதம் எழுதினார். இந்நிகழ்ச்சி ஜெர்மனி முழுவதும் பரவியது. மேலும் ஹிட்லருக்கு எதிராக செயல்பட பல கடிதங்களை எழுதி கிறிஸ்துவ மக்களை ஒன்று சேர்த்து போராடினார். ஹிட்லரையும் அவரின் ஆட்சியில் நடந்த அநியாயங்களையும் எதிர்த்து போரிட்டார். இதனால் 1 ஜூலை 1934 ஆம் ஆண்டு ஹிட்லரின் கூட்டாளிகளால் அடிமையாக பிடித்துக் கொண்டு செல்லப்பட்டார். இவர் இறந்த பிறகு இவரின் உடல் கப்புசின் சபை குருக்களால் எடுத்துச் செல்லப்பட்டு கப்புச்சின் சபைக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து பவேரியாவிற்கு கொண்டு வரப்பட்டு ஐஷ்டேட் என்ற ஊரில் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.


செபம்:
எங்கள் பொருட்டு உம் தந்தையிடம் உம்மையே கையளித்த எம் இறைவா! சீரழிந்த இவ்வுலகத்தை உம் மகனின் பாடுகளினாலும் இறப்பினாலும் சீர்ப்படுத்தினீர். அவர் எங்களுக்காகப் பெற்றுத்தந்த பாவ விடுதலையில் மகிழ்ந்திருக்க அருளைத் தந்தருளும். எம்மைச் சுற்றியிலும் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டும் தைரியத்தை தாரும். தீமைகளை அகற்றி நன்மை புரிந்திடச் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment