Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 17 March 2016

இன்றைய புனிதர் 2016-03-17 மறைப்பணியாளர் ஆயர் பேட்ரிக் Patrick

                   
                 இன்றைய புனிதர் 2016-03-17
        மறைப்பணியாளர் ஆயர் பேட்ரிக் Patrick

பிறப்பு 385,இங்கிலாந்து

இறப்பு 461, அயர்லாந்து

பாதுகாவல் : அயர்லாந்து, முடி திருத்துவோர், மலைவாழ் மக்கள், வீட்டு விலங்குகள்

இவரின் தந்தை தியாக்கோனாக இருந்தவர். பேட்ரிக் குழந்தை யாக இருக்கும்போதே நாடு கடத்தப்பட்டார். ஏறக்குறைய 6 வருடங்கள் அகதியாக வாழ்ந்தார். அப்போது இவரின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இவர் தன் மனதிற்குள் ஏற்பட்ட தூண்டுதலின் பேரில் மீண்டும் தன் இல்ல த்திற்கு வந்து சேர்ந்தார். அதன்பிறகு மீண்டும் தன் மனதிற்குள் ஒரு ஒலி பேசுவதை உணர்ந்தார். அவ்வொலி பேட்ரிக்கை அயர்லாந்து நாட்டிற்கு மறைபரப்பு பணியை செய்யும்படி வலியுறுத்தியது. அதன்பேரில் பேட்ரிக் ஃபெஸ்லாண்ட் Festland சென்று சில வருடங்கள் அங்கேயே வாழ்ந்து வந்தார். அங்கிரு ந்து 432 ஆம் ஆண்டு மீண்டும் அங்கிருந்து அயர்லாந்து சென் றார். அங்கு மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியாற் றினார். இவரை திருத்தந்தை முதலாம் கொலஸ்டின் Cölestin I அயர்லாந்தின் முதல் ஆயராகத் தேர்ந்தெடுத்தார். இவர் மிகச் சிறப்பாக இறைப்பணியை ஆற்றினார். இவர் அயர்லாந்து நாடு முழுவதும் சென்று மறைப்பரப்பு பணியாற்றினார். இவர் அந்நா ட்டு மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியைப் போதித்தார். பலரைத் திருமுறைக்கு மனந்திருப்பினார். அயர்லாந்து திருச்சபையை ஒழுங்குப்படுத்தினார்.


செபம்:
மாட்சி மிகுந்த எல்லாம் வல்ல கடவுளே! அயர்லாந்து நாடு மக் களூக்கு உமது மாட்சியை போதிக்க ஆயராம் புனித பேட்ரி க்கை அனுப்பியதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின் றோம். கிறித்துவர் என அழைக்கப்படுவதில் பெருமை கொள்ளும் நாங்கள் மீட்பின் நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றத் தொடர்ந்து உழைக்க உமதருள் தாரும்.

No comments:

Post a Comment