இன்றைய புனிதர் 2016-03-25
சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini
புனிதர்பட்டம்: 22 ஜூன் 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் தனது 20 ஆம் வயதில் கர்தினால் மார்க் ஆண்டோனியோ பார்பாரிகோ Marc Antonio Barbarigoஎன்பவரின் உதவியுடன் இவ ரின் பெயரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். இச்சபையினர் கைவிடப்பட்ட குழந்தைகளையும் விதவைகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை கண்காணித்து பராமரித்து வருவதை தங்களின் நோக்கமாக கொண்டனர். இவர் 1704 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் உரோமையிலும் தன் சபையை நிறுவினார். மேலும் இச்சபையினர் இளம் தம்பதியினர் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டுமென்றும் என்பதைப் பற்றியும் எடுத்துக்கூறி நல்ல உறவுடன் வாழ வழிகாட்டினர். இவர் தொடங்கிய சபையானது 1910 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.
No comments:
Post a Comment