Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 12 August 2015

இன்றைய புனிதர் 2015-08-12 புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)


பிறப்பு
28 ஜனவரி 1572
டிஜோன்(Dijon), பிரான்ஸ்

இறப்பு
13 டிசம்பர் 1641
பிரான்ஸ்





முத்திபேறுபட்டம்: 21 நவம்பர் 1751, 15 ஆம் பெனடிக்ட்


புனிதர்பட்டம்: 16 ஜூலை 1767, 13 ஆம் கிளமென்ட்

இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார். இதனால் இவர் இறைவனையே தாயாகக் கொண்டு வாழ்ந்தார். அரண்மனையில் இவர் வாழ்ந்தபோதும் கூட ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். பின்னர் இவர் தே ஷாந்தால் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். 6 பிள்ளைகளைப் பெற்றபின் திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து தன் கணவரை இழந்தார். பின்னர் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தப்பின்னர், தான் ஓர் துறவற சபையை தொடங்க விரும்பினார். இதனால் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தார்.

பின்னர் பிரான்சிஸ் சலேசியாரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்தெடுத்து, அவர் காட்டிய வழியில் பின்தொடர்ந்தார். அரண்மனையில் வாழ்ந்ததால் முழுமையாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட முடியவில்லை என்பதை உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறினார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். அப்போது தன் ம்கனையும் இழந்தார். அச்சமயத்தில் பிளேக் நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. ஏராளமான மக்கள் அந்நோயால் இறந்தனர். அவரின் மருமகளும் அந்நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் இன்னும் மனமுடைந்த ஜேன் பிரான்சிஸ், பிளேக் நோயால் தாக்கப்பட்ட மக்களிடையே பணிபுரிந்தார். தன் அரண்மனை சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்காக செலவு செய்தார். அப்போதுதான் பிளேக் நோயால் பாதித்தவர்களுக்கு பணிபுரிவதற்கென்றே ஓர் துறவற சபையை நிறுவினார். தன் பிள்ளைகளையும், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து இறைப்பணியை செய்தவர். ஆழ்ந்த விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டு, இடைவிடாமல் இறைபணி ஆற்றினார். தமக்கிருந்த எல்லாவற்றையுமே இறைவனின் மகிமைக்காக இழந்தார்.

No comments:

Post a Comment