Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 28 August 2015
இன்றைய புனிதர் 2015-08-29 புனித திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்பட்ட நாள் (The Beheading of St. John the Baptist)
யோவான் நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தார். இதை அறிந்த ஏரோது அரசன் அவரை சிறையலடைத்தான் (எசாயா 49:1-2) ல் கூறுவதுபோல மறைசாட்சியாக மரித்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழி மரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை" என்று கூறினார் (திருத்தூதர்பணி 13:23-25) ஏரோது அரசன் குடித்து, ஏரோதியாளின் நடனத்துக்கு அடிமையாகி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே, தன் காவலனை அனுப்பி சிறையிலிருந்த யோவானுடைய தலையை வெட்ட செய்தான். பின்னர் யோவானின் சீடர்கள் வந்து, அவரின் உடலை எடுத்து சென்றனர். ஜெலாசியன் திருத்தந்தைக்கு உரித்தாக்கப்படுகின்ற முற்கால வழிபாட்டு புத்தகத்தில் கண்டுள்ளபடி இன்றைய திருநாளின் பெயர், "புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்" என்றும், "புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது" என்றும் அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment