Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 25 August 2015

இன்றைய புனிதர் 2015-08-26 யேசுவின் புனித தெரசாள் Theresia von Jesus OSCI (Teresa Jornet y Ibars) கன்னியர்



பிறப்பு 9 ஜனவரி 1843  ஐடோனா Aytona, ஸ்பெயின்
இறப்பு 26 ஆகஸ்டு 1897 பார்பஸ்ட்ரோ Barbastro, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1958, திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்
புனிதர்பட்டம்: 27 ஜனவரி 1974 திருத்தந்தை ஆறாம் பவுல்


இவர் சிறுவயதிலிருந்தே பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை, எத்துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார்.


நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872 ஆம் ஆண்டு பார்பஸ்ட்ரோ(Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "ஏழைகளின் எளிய அருட்சகோதரிகள்"(Little sisters of poor) என்ற பெயரை சூட்டினார். ஏழையாக பிறந்து, வளர்ந்த தெரசா, தன் சபையையும் ஏழைகளுக்காகவே ஏற்படுத்தினார். இத்துறவற சபை முதலில் லெரிடா(Lerida) என்ற ஊரில் தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கான இச்சபை தெரசா இறக்கும்போது, 50 துறவற இல்லமாக பெருகி, வளர்ச்சி அடைந்தது.


No comments:

Post a Comment