Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 1 January 2016

இன்றைய புனிதர் 2016-01-01 ருஸ்பே நகர் ஆயர் பல்கெண்டியஸ் Fulgentius von Ruspe

பிறப்பு
467,
டேலேப்டே Telepte, நார்த் ஆப்ரிக்கா

இறப்பு1 ஜனவரி,532 ருஸ்பே Ruspe, நார்த் ஆப்ரிக்கா

இவர் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த முறையில் தனது கல்வியை முடித்தார். அதன்பிறகு கிரேக்கம் மற்றும் இத்தாலி மொழியைக் கற்றுக்கொள்ளும் பயிற்சியில் இருக்கும்போது துறவற மடத்தில் சேர்ந்து, விரைவில் குருப்பட்டம் பெற்றார். இவரை ஆயராக தேர்ந்தெடுக்க பலமுறை கூறியபோதும், ஒவ்வொரு முறையும் அதற்கிணங்காமல் மறுத்தார். இறுதியாக 508 ஆம் ஆண்டு வலுக்காட்டாயமாக ருஸ்பே நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர், இருமுறை சர்தீனியன் தீவிற்கு Sardinien Inselநாடு கடத்தப்பட்டார்.

இவர் மீண்டும் 523 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். பிறகு தொடர்ந்து ருஸ்பே நகரில் தனது ஆயர் பணியை ஆற்றினார். இறைப்பணியில் சிறந்து விளங்கிய இவர் தனது செப நேரத்தில் இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! உம் மந்தையின் மக்களை பராமரிக்க, ஆயர் பல்கெண்டியஸை எம் முன்னோர்களுக்குக் கொடையாகத் தந்தீர். அவரின் அரும்பெரும் செயல்களை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நீர்தாமே தொடர்ந்து ருஸ்பே நகரில் வாழும் மக்களை வழிநடத்திக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment