Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 27 October 2015

பிறப்பு திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, கானாவூர் திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு,(?)


பிறப்பு
திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, கானாவூர்
திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு,(?)


இறப்பு
திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, பெர்சியன்
திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு, பெர்சியன்

திருத்தூதர் சீமோன்: பாதுகாவல்: சாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள்

திருத்தூதர் யூதா ததேயு: பாதுகாவல்: ஆபத்தில் உள்ளவர்கள்

திருத்தூதர் சீமோன்: திருத்தூதர் பட்டியலில் சீமோனின் பெயர் 11 ஆம் இடத்தில் இடம் பெறுகின்றது. இவர் தீவிரவாதி என்றழைக்கப்பட்டார். மெசபத்தோமியா, சிரியா போன்ற நாடுகளில் திருத்தூதுரைப்பணியை செய்தார். என்று கூறப்படுகின்றது. நற்செய்திப்பணியாற்றும்போது கொலை செய்யப்பட்டார்.

திருத்தூதர் யூதா ததேயு: ததேயு என்று அழைக்கப்பெற்ற யூதா, கடைசி இராவுணவின்போது, ஆண்டவர் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது தன் திருத்தூதருக்கு மட்டும் வெளிப்படுத்துவது ஏன் என்று அவரைக் கேட்ட திருத்தூதர் ஆவார். இவைகளை தவிர வேறு எதுவும் இவர்கள் இருவரைப்பற்றியும் அதிகம் கொடுக்கப்படவில்லை.


செபம்:
ஆதிமுதல் அந்தம்வரை படைத்து பராமரித்தாளும் பரம பொருளை எம் இறைவா! புனித திருத்தூதர்களின் போதனை வழியாக நாங்கள் உம்மை அறிந்து, ஏற்றுக்கொள்ள செய்தீர். இவர்களின் இறைவேண்டலால் மக்களை உம்மில் நம்பிக்கை கொள்ள செய்தருளும். உம்மீதுள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து இதன் வழியாக உம் திருச்சபையை மேன்மேலும் வளரச் செய்யும்

No comments:

Post a Comment