Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 23 October 2015

இன்றைய புனிதர் 2015-10-23 கப்பெஸ்ட்ரானோ நகர் துறவி ஜான் Johannes von Capestrano


பிறப்பு24 ஜூன் 1386,கப்பெஸ்ட்ரானோ, இத்தாலி


இறப்பு23 அக்டோபர் 1456,இலோக் Ilok, ஹங்கேரி

இவர் அக்குயிலா (Aquila) என்பவரின் மகன். இவர் பெருஜியாவில்(Perugia) தன் கல்வியை பயின்றார். தன்னுடைய 26 ஆம் வயதிலேயே, அந்நகரின் மேயர் பதவியை ஏற்றார். அப்போது இந்நகரை கைப்பற்ற போர் ஏற்பட்டது. இப்போருக்குப்பின் இவர் மனமாறினார். திருமணம் செய்த இவர், தன் இல்லற வாழ்வை துறந்து, 1415 ல் புனித பிரான்சிஸ்குவின் சபையில் சேர்ந்தார். பின்னர் இவர் சியென்னா நகர் பெர்னார்டின் Bernhardinஎன்பவரின் நண்பரானார். இவர் தன்னுடைய குருப்பட்டம் பெற்றபின் தானாகவே முன்வந்து பல்வேறு மறையுரைகளை ஆற்றினார்.

பிறகு பெர்னார்டினுடன் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் சென்று மறைபரப்புப் பணியை ஆற்றினார். சென்ற இடமெல்லாம் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, மக்களை கவரும் விதத்தில் மறையுரையாற்றி, விசுவாசத்தைப் பரப்பினார். தன்னுடைய 40 வயதிற்குள்ளே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைபரப்பு பணியாற்றி கிறிஸ்துவ மதத்தை வளர்த்தார். பிறகு சிலுவைப்போர் புரிய போர் வீரர்கலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். போர் வீரர்களுடன், தானே போர்புரிய செல்லும்போது, உடல் நலக்குறைவால் உயிர்துறந்தார். இவர் ஐரோப்பாவின் தந்தை என்றழைக்கப்படுகின்றார்


செபம்:
நலமளிக்கும் வல்லவரே எம் இறைவா! உமது இறைஊழியத்தில் நிலைத்து நிற்க புனித யோவானை வலுப்படுத்தினீர். ஐரோப்பாவில் உம்மை பறைசாற்றிட அவரை தேர்ந்தெடுத்தீர். தொடர்ந்து இறைவிசுவாசம் நிலைத்திட உம்மருள் தாரும். உமது பாதுகாவலில் நாங்கள் நலமுடன் வாழவும், உமது திருச்சபை நிலையான அமைதியை பெறவும் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment