Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 8 October 2015
இன்றைய புனிதர் 2015-10-09 புனித ஜான் லியோனார்டி, சபை நிறுவுனர் St. John Leonardi SP
இவர் மருந்து தயாரித்து விற்கும் கலையை கற்றார். ஆனால் அப்பணியை செய்ய விருப்பமில்லாமல் இருந்தார். இவரின் மனம் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டது. எனவே அப்பணியை விட்டுவிட்டு, 1572 ஆம் ஆண்டு குருவானார். பிறகு மறைப்பணியை ஆற்றினார். முக்கியமாக இவர் தானாகவே முன்வந்து சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் 1574 ஆம் ஆண்டில் இறையன்னையின் பெயரால், துறவற சபை ஒன்றை நிறுவினார். இதனால் பல இன்னல்களை மேற்கொண்டார். இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். இருப்பினும், திருமறையை பரப்புவதற்கென்று, மீண்டும் மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். உரோம் நகரிலுள்ள "திருமுறைப் பரப்புதலின் பேராயம்" என்ற நிறுவனத்திற்கும் அடித்தளம் இட்டார். திருத்தந்தையர்கள் பலரின் முயற்சியால் இச்சபைகள் அனைத்தும், இன்று சிறப்பாக செயல்படுகின்றது. திருச்சபையில் உள்ள பல சபைகள் மீண்டும் தங்களின் ஒழுங்குமுறைப்படி செயல்பட, இவர் பரிவன்புடனும், முன்மதியுடனும் செயல்பட்டார். இவையனைத்தையும் நிறைவேற்றி வெற்றி பெற பல துன்பங்களையும் பொறுமையோடு ஏற்று, எளிமையாக வாழ்ந்தார். 1614 ஆம் ஆண்டு திருத்தந்தை 5 ஆம் பவுல் இச்சபைகள் முழுமையாக செயல்பட அதிகாரம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment