Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 1 October 2015

இன்றைய புனிதர் 2015-10-01 01 புனித சிறுமலர் தெரசா St. Therese of Lisieux



பிறப்பு2 ஜனவரி 1873,அலேங்கன் Alencon, பிரான்சு

இறப்பு30 செப்டம்பர் 1897,லிசியு Lisieux, பிரான்சு
முத்திபேறுபட்டம்: 29 ஏப்ரல் 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

புனிதர்பட்டம்: 17 மே 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: பிரான்சு, ரஷ்யா, எய்ட்ஸ் நோயாளர்கள், பூ வியாபாரிகள், தோட்டக்காரர்கள், காச நோயிலிருந்து

இவர் குழந் இயேசுவின் தெரேசா என்றழைக்கப்பட்டார். இவர் ஓர் மிகவும் பக்தியான கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலிருந்தே இவரின் பெற்றோர் இவரை, நல்ல ஓர் பக்தியுள்ள கிறித்தவப் பெண்ணாக வளர்த்தனர். தனது இளம் வயதிலிருந்தே தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்ற உணர்வில் வளர்ந்தார். தன் குடும்பத்தில் ஒன்பதாவதாக பிறந்த இவர், அவர்களைப் போலவே, துறவற இல்லத்திற்கு சென்று பணியாற்ற வேண்டுமென்று ஆசைக்கொண்டார். தன் ஆசையை நிறைவேற்ற, தனது மூத்த சகோதரிகள் வாழ்ந்த கார்மேல் சபையில் தன்னையும் அர்ப்பணித்தார்.


தனது 15 ஆம் வயதிலேயே இறையழைத்தலை உணர்ந்து, கார்மேல் இல்லம் சென்றார். ஆனால் இளம் வயதின் காரணமாக கார்மேல் மடத் துறவிகள், இவரை ஏற்க மறுத்தனர். இதனால் ஆயரிடம் சென்று, தன் விருப்பத்தை தெரிவித்து மீண்டும் கார்மேல் சபைக்குள் நுழைந்தார். இருப்பினும் வார்த்தைப்பாடுகளைப் பெற இவருக்கு வயது இல்லாததால், வார்த்தைப்பாடுகளை பெறாமல் போனார். இதனால் ஆயருடன் உரோம் நகர் சென்று, திருத்தந்தை 13 ஆம் லியோவை சந்தித்து, அவருடன் உரையாடி, கார்மேல் சபையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க அனுமதிப் பெற்றார்.

இவர் கார்மேல் மடத்தில் வாழ்ந்தபோது பல மணிநேரங்கள் இறைவனோடு ஒன்றிருந்து செபித்தார். வார்த்தைப்பாடுகளை பெற்றபின் ஏறக்குறைய 9 ஆண்டுகள், நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தார். அப்போது ஏராளமான பணிகவேதனைகளை அடைந்தார். எந்த ஒரு பணியும் செய்ய முடியாமல் துன்பப்பட்டார். இருப்பினும் இறைவன் தன்னை முழுவதும் அன்பு செய்கிறார் என்று கூறி, அவருக்காக அனைத்து வேதனைகளையும் தாங்கிக்கொண்டார். தன்னை முழுவதும் சிறுசிறு பணிகளின் வழியாக இயேசுவிடம் ஒப்படைத்தார். அவர் தங்கியிருந்த இல்லத்தை ஒரு சிறிய அழுக்கும் இல்லாமல் சுத்தம் செய்தார். சிறு சிறு இலைகளையும் கூட அகற்றினார். இதன் வழியாக பல ஆன்மாக்களை மனந்திருப்புகிறேன் என்றார். தன்னால் இயன்ற சிறு சிறு பணிகளை செய்து, இறைவனை அன்பு செய்து, அவரை மகிமைப்படுத்தி, பல பாவிகளை மனந்திருப்பினார். தான் இருந்த இருப்பிடத்திலிருந்தே உலக மக்களின் ஆன்மாக்களுக்காக செபித்து, பலரை மனமாற்றினார். தாழ்ச்சியின் வழியாக புனிதத்தை அடையமுடியும் என்பதை மற்றவர்களுக்கு தன் வாழ்வின் வழியாக கற்றுக்கொடுத்தார். இயேசுவை தனது சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் எப்படி அன்பு செய்வது என்பதை மிக எளிதாக மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். கிறிஸ்துவை அறியாதவர்களையும் அவரை தெரிந்துகொள்ளச் செய்தார். கிறிஸ்துவை மறுதலித்தவர்களையும், தங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை ஏற்று பின் தொடரச் செய்தார். தான் செய்யும் சிறு செயல்களையும் ஆண்டவரே, உமக்கே செய்கிறேன் என்று கூறி ஆண்டவரைப் பற்றி வாழ்ந்தார்.

ளை செய்தார். தனது பணியின் வழியாகவும், செபத்தின் வழியாகவும் திருச்சபைக்கு ஏராளமான உதவிகளை செய்தார்.

அதன்பிறகு சிறுமலர் தெரசா எலும்புறுக்கி (காசநோய்) TB என்ற நோயால் தாக்கப்பட்டார். இந்நோயால் தான் இறக்கும்வரை பல

செபம்:
அன்புத் தந்தையே! இளம் வயதிலிருந்தே தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து, அன்பு செய்து வாழ்ந்த சிறுமலரைப் போல, உம்மை அன்பு செய்யும் பேற்றை எமக்கும் அருளும். நாங்கள் என்றும் உமக்குரியவர்களாக வாழ, உமது வரம் தாரும்.தை

No comments:

Post a Comment