Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 4 October 2015

இன்றைய புனிதர் 2015-10-05 05 புனித புளோரா St.Flora, Virgin



பிறப்பு1309,பிரான்ஸ்

 இறப்பு1347

பாதுகாவல்: தனிமையில் வாழும் பெண்கள், கைவிடப்பட்டவர்கள்

இவர் பெற்றோர் இவரை, சிறு வயதிலிருந்தே பக்தியில் வளர்த்தனர். இவர் வளர்ந்த பின்னர், இவரின் பெற்றோர், இவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த புளோரா பெற்றோரை எதிர்த்தார். தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி, தாதியர் படிப்பைப் படிக்க சென்றார். 1324 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித ஜான் மருத்துவ பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு துறவறத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளால் கவனிக்கப்பட்டு, கடவுளின் அருளால் குணம் பெற்றார்.


புளோரா பலமுறை இறைவனிடமிருந்து காட்சிகளைப் பெற்றார். ஒருமுறை அனைத்துப் புனிதர்களின் விழாவன்று, சுவையான உணவுகளை உண்ணமாட்டேனென்றும், கடவுளின் அருளை மேலும் பெற, உண்ணா நோன்பு இருப்பேனென்றும், தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ஒருமுறை செபித்துக்கொண்டிருக்கும்போது, தூய ஆவியால் தூண்டப்பட்டு, தரையிலிருந்து நான்கு அடி உயரத்திற்கு பறந்தார். என்று, அங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர்.

இயேசுவின் திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய, திரு இரத்தத்தைப்போலவே, இவரின் கைகளிலிருந்தும், வழிந்தோடியது என்று கூறப்படுகின்றது. இறைவனிடமிருந்து பெற்ற தீர்க்கதரிசனத்தால் எதிர் காலத்தில், என்ன நடக்க உள்ளது என்பதை, முன்னதாகவே அறிவித்தார். இவர் மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். இயேசுவின் திருவுடலைப் பெற்றபின், தாழ்ச்சியோடு, தன்னை அவரிடம் அர்ப்பணித்தார். இறைவனிடம் இவர் கொண்டிருந்த பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு, இவரை பலர், தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்த்தெடுத்தனர். இவர் வாழ்ந்தபோதும், இறந்தபின்பும் பல அற்புதங்களை செய்தார்.


செபம்:
வழிநடத்தும் தெய்வமே! எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை, முங்கூட்டியே அறிவிக்கும் பேற்றை புனித புளோராவிற்கு அருளினீர். பலரின் வாழ்வில், ஆன்மாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த இப்புனிதரைப்போல இன்றும் ஆன்மீக வழிகாட்டிகளாக திகழும். உம் சீடர்களை, உம் பாதுகாப்பில் வைத்து வழிநடத்தும் தூய ஆவியின் அருளையும், வரங்களையும், கொடையையும் பொழிந்து, வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment