Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 17 October 2015

இன்றைய புனிதர் 2015-10-17 அந்தியோக்கியா நகர் ஆயர் இக்னேசியஸ் St. Ignatius of Antioch


பிறப்பு35,சிரியா









இறப்பு107 அல்லது 117,உரோம்

பாதுகாவல்: மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் வட ஆப்ரிக்க பகுதி ஆலயங்கள்இக்னேசியஸ் திருத்தூதர் ஜானின் மாணவர். அந்தியோக்கிய நகரின் மூன்றாவது ஆயர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை என்றழைக்கப்பட்டார். காட்டு மிருகங்களால் கடித்துக் கொல்லப்பட்ட மறைசாட்சியர்களைப் பற்றி கடிதங்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிகால திருச்சபையின் இறையியலாளர் என்று அழைக்கப்பட்டார். திருச்சபையில் ஆயர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதைப் பற்றியும் திவ்விய நற்கருணையைப்பற்றியும் முக்கிய கடிதங்களை எழுதியுள்ளார். இவர் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்றார்.


இவர் கிறிஸ்துவத்தை பரப்ப அரும்பாடுபட்டார். இதனால் தற்போது உரோம் நகரில் உள்ள கொலோசேயத்தில்(Kolosseum) சிறைபிடித்து வைக்கப்பட்டு பல கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டு மறைசாட்சியாக கிறிஸ்துவின் பொருட்டு தன் உயிரை ஈந்தார்.


செபம்:
அன்பு தந்தையே எம் இறைவா! உம் பொருட்டு தன் உயிரை ஈந்து, உம்மை இவ்வுலகில் பறைசாற்ற பாடுபட்ட ஆயரான அந்தியோக்கிய நகர் இக்னேசியஸை எமக்கு நீர் பரிசாக தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரின் வேண்டுதலால் இன்னும் சிறப்பாக உம் திருச்சபையை வளர்த்தெடுத்து நீர் அருள்புரிய வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment