Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 22 October 2015

இன்றைய புனிதர் 2015-10-22 கலிலேயா நகர் சலோமி Salome von Galiläa



சலோமி செபதேயுவின் மனைவி. அப்போஸ்தலர் அருளப்பர் மற்றும் யாக்கோபின் தாய். இவர் பெயர் லூக்கா, மத்தேயு, மார்க் ஆகிய மூன்று நற்செய்தியிலும் இடம்பெறுகின்றது. எருசலேமில் சிலுவையின் அடியில் நின்ற பெண்களில் இவரும் ஒருவராவார். இயேசுவின் உயிர்ப்பு திங்களன்று, இயேசுவின் காலியான கல்லறையை சென்று பார்த்தவர்களில் இவரும் உடன் இருந்தார்.

செபம்:
புதுமைகளை செய்பவரே எம் தந்தையே! சலோமியின் வழியாக, அவரின் பிள்ளைகள் இருவரை உம் சீடர்களாக தேர்ந்தீர். உமது சிலுவைப்பாடுகளை உடனிருந்து கண்டு வேதனை அனுபவித்ததின் வழியாக, அவரை நீர் உயர்த்தினீர். அவரை மாதிரியாக கொண்டு, தன் பிள்ளைகளை உம் பணிக்கு அர்ப்பணிக்க, நல்ல உள்ளம் தந்து எம் தாய்மார்களைக் காத்திட வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment