Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 24 October 2015

இன்றைய புனிதர் 2015-10-25 மறைசாட்சி கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் Krispin und Krispinian

பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி

இறப்பு287,சோயிசோன்ஸ் Soissons, பிரான்சு

பாதுகாவல்: ஒஸ்னாபூருக் Osnabrück, சோயிசோன்ஸ், காலணி தயாரிப்பவர்கள், தையல் தொழிலாளர்கள்

இவர்கள் இருவரும் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் வட பிரான்ஸில் நற்செய்தியை போதித்தவர்கள். செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள். இடைவிடாமல் ஏழைகளுக்காக உழைத்தார்கள். இவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க மாக்சிமியான் (Maximian) என்பவன் தடைவிதித்தான். அதைமீறி இருவரும் கிறிஸ்துவை அறிவித்தனர். கிறிஸ்துவ நெறியில் வாழ அனைவரையும் தூண்டினர். இதனால் கோபவெறிக்கொண்ட மாக்சிமியான் இருவரையும் எரியும் மெழுகில் இறக்கினான். மிகக் குளிர்ந்த நீரில் நாள் கணக்கில் நிற்க வைத்தான். அப்போதும் இருவரும் சிறிதும் மனந்தளராமல் நற்செய்தியை அறிவித்தனர். இவர்களின் செயல்களை கண்ட மாக்சிமியான் இன்னும் வெறிக்கொண்டு தவறாக தீர்ப்பிட்டு கொன்றான்

செபம்:
உண்மையின் பரம்பொருளே எம் இறைவா! நீர் இவ்வுலக மக்களின் மத்தியில் வாழ்கின்றீர் என்பதை தன் வாழ்வின் வழியாக பறைசாற்றிய இன்றைய புனிதர்களை எமக்கு முன்மாதிரியாக தந்தீர். இவர்களின் வேண்டுதலால், நாங்கள் உமது வார்த்தைக்கு செவிமடுத்து நீர் காட்டும் உம் வார்த்தையின் பாதையில் நடக்க எமக்கு உம் அருள் தாரும்.

No comments:

Post a Comment