Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 27 October 2015

இன்றைய புனிதர் 2015-10-27 வோல்ஃப்ஹார்டு Wolfhard


பிறப்பு 1070,அவுக்ஸ்பூர்க் Augsburg, Germany


இறப்பு30 ஏப்ரல் 1127,வெரோனா Verona, இத்தாலி

பாதுகாவல்: ஊர்க்காவலர்கள், கூர்க்கா

இவர் ஊர்களில் பொதுப்பணி செய்யும் கலையைக் கற்றார். பிறகு பவேரியாவிலிருந்து, வெரோனா சென்று, அங்கு பணியாற்றினார். அங்கு ஊர்ப்பொதுப்பணிகள் அனைத்தையும் மிக சிறப்பாக ஆற்றினார். இவர் தான் செய்த பணியின் வழியாக பெற்ற பணத்தை கொண்டு, வெரோனா முழுவதிலும் இருந்த ஏழைகளுக்கு உதவினார். மிகக் குறுகிய நாட்களில் வெரோனா மக்களில் இனங்கண்டுக்கொள்ளப்பட்டார். ஏராளமான ஏழைகளின் வாழ்வை உயர்த்தினார். வெரோனா முழுவதிலும் வாழ்ந்த மக்களால் பெரிதும் புகழப்பட்டார். ஆனால் வோல்ஃப்ஹார்டு அப்புகழை விரும்பவில்லை. இவருக்கு வெரோனா மக்கள் உயர்பதவியை அளிக்க விரும்பினர்.

வொல்ஃப்ஹார்டு பெயரையும், புகழையும், பணத்தையும் சிறுதும் விரும்பாமல், காட்டிற்குச் சென்று தனிமையாக வாழ்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தன் செப வாழ்வில் திருப்தி அடைந்த வோல்ஃப்ஹார்டு மீண்டும் 1117 ல் வெரோனா திரும்பினார். பிறகு ஒரு துறவற மடத்திற்கு சென்று, அங்கும் தனிமையில் வாழ்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் துறவி போலவே வாழ்ந்தார். இவர் அத்துறவற மடத்தில் இருந்த துறவிகளுடன் இவர் இறந்த உடன் உடலை தெருவிலிருக்கும் சாலையோரத்தில் புதைக்கும்படி கூறியிருந்தார். அவர் இறந்தபோது அம்மடத்துறவிகள் அவ்வாறே செய்தனர். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வெரோனாவில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டது.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! தான் ஈன்ற பணம் பொருட்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்து, எளியோரில் உம்மைக்கண்ட வோல்ஃப்ஹார்டின் வாழ்வை, நாங்களும் வாழ, எமக்கு நல்ல உள்ளம் தாரும். தன்னலமின்றி பிறர் நலம் காண நாங்கள் முன்வர தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க நீர் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment