Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 1 October 2015
இன்றைய புனிதர் 2015-10-02 புனித லெகார் St. Legar
இவர் 651 ஆம் ஆண்டு புனித ஆசீர்வாதப்பர் சபையில் குருவானார். அப்போது அரசியாக இருந்த புனித பாடில்டிஸ் ( St. Bathildis) என்பவருக்கு, அரசியலில் மாற்றங்கள் கொண்டுவர உதவினார். 656 ஆம் ஆண்டு அரசி பாடில்டிஸ் இறந்துவிட்டார். இதனால் லெகார் அவரின் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமளவில் உதவினார். பிறகு 663 ஆம் ஆண்டில் அவுடூன் (Autun) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன் மாவட்டத்தில் இருந்த, ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து, அன்பு காட்டி வந்தார். அரசி பாடில்டிஸ்சிற்குப் பிறகு, அரசர் 3 ஆம் குளோடேயர் (Clodarire III) என்பவர் ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் சில குழப்பங்கள் ஏற்படவே, அவருக்கு எதிராக அரசின் உடன் பிறந்த சகோதரரே பிரச்சினைகள் செய்தார். இதனால் அரசர் 3 ஆம் குளோடேயரும் இறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment