Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 1 October 2015

இன்றைய புனிதர் 2015-10-02 புனித லெகார் St. Legar



பிறப்பு615 / 616

இறப்பு679,சார்சிங் Sarcing, பிரான்ஸ்

பாதுகாவல்: அவுடூன் நகர், கண் நோயிலிருந்து

இவர் 651 ஆம் ஆண்டு புனித ஆசீர்வாதப்பர் சபையில் குருவானார். அப்போது அரசியாக இருந்த புனித பாடில்டிஸ் ( St. Bathildis) என்பவருக்கு, அரசியலில் மாற்றங்கள் கொண்டுவர உதவினார். 656 ஆம் ஆண்டு அரசி பாடில்டிஸ் இறந்துவிட்டார். இதனால் லெகார் அவரின் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமளவில் உதவினார். பிறகு 663 ஆம் ஆண்டில் அவுடூன் (Autun) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன் மாவட்டத்தில் இருந்த, ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து, அன்பு காட்டி வந்தார். அரசி பாடில்டிஸ்சிற்குப் பிறகு, அரசர் 3 ஆம் குளோடேயர் (Clodarire III) என்பவர் ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் சில குழப்பங்கள் ஏற்படவே, அவருக்கு எதிராக அரசின் உடன் பிறந்த சகோதரரே பிரச்சினைகள் செய்தார். இதனால் அரசர் 3 ஆம் குளோடேயரும் இறந்தார்.

இதனால் அரண்மனை ஆட்சியை தொடர்ந்தாற்ற அவரின் சகோதரர் தியரி (Thierry) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2 ஆம் சில்டேரிக் (Childreic II) என்பவரும் லெகாரும் உடனிருந்து உதவினார். இதனை அறிந்த சில்டேரிக்கின் நண்பர் ஆத்திரமடைந்தார். இந்த சில்டேரிக்கின் நண்பர் எப்ரோயின் (Ebroin) லெகாரை எதிரியாகக் கருதினார். லெகார் அரச குடும்பத்திற்கு ஆலோசகராக இருந்ததை எப்ரோயின் விரும்பவில்லை. இதனால் 675 ல் அவர் லெகாரை அவுடூன் மறைமாவட்டத்திலிருந்து நாடு கடத்தினார். அங்கு அவரை மிகக் கொடுமையாக துன்புறுத்தினான். அவரின் உதடுகளை துண்டித்தான். அவர் மறைப்பணியாற்றாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, அவரின் நாக்கை அறுத்தான்.

அவனின் ஆத்திரம் அடங்காததால், லெகாரின் சகோதரர் கெரினஸ்(Gerinus) என்பவரையும் எப்ரோயின் கொன்றான். பின்பு லெகாரை சிறையிலடைத்தான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு லெகாரை, எப்ரோயின் மேர்லி(Marly) என்ற நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தான். இறுதியில் லெகாரின் மேல் எத்தவறும் இல்லை என்று கூறி, நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடர்ந்து இவர் இறைவேண்டல் செய்து, இறுதியில் உடல் நலம் குன்றி இறந்தார்.

No comments:

Post a Comment