Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 16 October 2015

இன்றைய புனிதர் 2015-10-16 துறவி எட்விக் Hedwig


பிறப்பு1174,பவேரியா Bayern, ஜெர்மனி


இறப்பு15 அக்டோபர் 1243,சிலேசியா Silesia

புனிதர்பட்டம்: 26 மார்ச் 1267, திருத்தந்தை 4 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: பெர்லின், போலந்து, சிலேசியா

இவர் சிலேசியா நாட்டை சேர்ந்த ஹென்றி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்தார். எட்விக் ஏழு குழந்தைகளுக்கு தாயானார். இவர் தனது குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஹென்றி டிரேப்னிட்ஸ்(Trebnitz) என்ற ஊரில் சிஸ்டர்சியன் Cistersien துறவற மடத்திற்கென்று, துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அம்மடத்தில் துறவற இல்லத்திற்கான, மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். ஹென்றி 1238 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் அதே ஆண்டு, எட்விக் டிரேப்னிட்சில் தன் கணவர் கட்டிய துறவற மடத்தில் சேர்ந்து செபதவ வாழ்வில் ஈடுபட்டார். அப்போது தன் பிள்ளைகளிடையே பிரச்சனைகள் எழுந்தது. இவரின் ஒரு பிள்ளை மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். எட்விக் தன் பிள்ளைகளுக்காக இடைவிடாமல் செபித்து செபத்தினாலேயே மங்கோலியர்களை வென்றார்.

எட்விக் தனக்கு சொந்தமான நிலங்கலை திருச்சபைக்கு வழங்கினார். தனது கணவர் உதவியுடன் ஏழைகளுக்கு ஏராளமான் உதவிகளை செய்தார். இவர் குளிர்காலத்தில் கூட பனிகட்டிகள் கொட்டியபோதும், காலணி அணியாமலே பனியில் நடந்து சென்று செபம் செய்து, மறைபணியாற்றி ஏழைகளுக்கு உதவியுள்ளார். இவர் இறந்த உடன் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பேராலயத்தில் இவரின் உடல் வைக்கப்பட்டது.


செபம்:
எல்லாம் வல்லத் தந்தையே! அனைவர்க்கும் தாழ்ச்சியின் எடுத்துக்காட்டாக விளங்கிய புனித எட்விக்கின் புனிதமிகு வாழ்வினால் நீர் எங்களுக்கு துணை புரியும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment