Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 10 October 2015

இன்றைய புனிதர் 2015-10-10 புனித பிரான்சிஸ் போர்ஜியா St. Francis Borgia, Confessor & Priest



பிறப்பு1510,வாலென்சியா Valencia, ஸ்பெயின்

இறப்பு1573,உரோம்

முத்திபேறுபட்டம்: 23 நவம்பர் 1624, திருத்தந்தை 8 ஆம் ஊர்பான்
புனிதர்பட்டம்: 20 ஜூன் 1670, திருத்தந்தை 10 கிளமெண்ட்
பாதுகாவல்: போர்த்துக்கல் நாடு, பூகம்பத்திலிருந்து

பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் (Eleanor) என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர். இவர் தனது குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார். இவர் அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார். ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார்.


இவர் குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். இவரின் இயேசு சபை தலைவர். பிரான்சிசை சோதிக்கும் நோக்குடனும் அவரின் ஆன்மீக வாழ்வை அறியவும், சபை தலைவர் இவ்வாறு சிறப்பித்தார். ஆனால் பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார்.

இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை இக்குருக்கள் திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றியனைத்தும் அருள்தந்தை பிரான்சிசைச் சார்ந்தது.


செபம்:
விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் ஒருபோதும், பெற்றுக் கொள்ளாதவரே தெய்வமே! இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் துறந்து, தாழ்ச்சியோடும், எளிமையோடும் வாழ்ந்த புனித பிரான்சிஸ் போர்ஜியாவின், முன்மாதிரியான வாழ்வை, நாங்களும் பின்பற்றி ஏழ்மையை ஆடையாக உடுத்தி வாழ, வரம் தர இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment