Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 15 October 2015
இன்றைய புனிதர் 2015-10-15 மறைவல்லுநர் அவிலா தெரசா Theresa von Avila
முத்திபேறுபட்டம்: 24 ஏப்ரல் 1614, திருத்தந்தை 5 ஆம் பவுல்
தெரசா அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் பெயாட்ரிஸ் டீ அகுமதா (Beatrix de Ahumada) என்பவரின் மகளாக பிறந்தார். சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும் பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள் இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுதான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும் கூறினார். இவர் தனது 7 ஆம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527 ல் அவரின் 12 ஆம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531 ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535 ஆம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment