Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 13 October 2015

இன்றைய புனிதர் 2015-10-14 புனித முதலாம் கலிஸ்துஸ் St.Callistus I



பிறப்பு2 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி

பாதுகாவல்: கல்லறையில் பணிபுரிவோர்

இவர் ஓர் அடிமையாக இருந்தவர். ஹிப்போலிடஸ் அரசன் (Hippolytus) மக்களை கொடுமைப்படுத்தி, கடுமையான விதிகளை விதித்து, கொலை செய்தான். மக்களை தன் விருப்பப்படி அடக்கி, ஆண்டுவந்ததுடன், அவர்களை தன்னிடம் அடிமையாகவும் வைத்தான். கலிஸ்துஸ்சையும் அவன் பிடியில் வைத்திருந்தான். அவன் செய்த அனைத்து அட்டூழியங்களையும் கலிஸ்துஸ் பொறுமையோடு ஏற்று, கிறிஸ்துவை தன் நெஞ்சில் சுமந்தார். கிறிஸ்துவ மக்களுக்காக போராடினார். அநீதிகளை தைரியத்துடன் தட்டிக்கேட்டார். இதனால் இவருக்கு கடுமையான தண்டனை அளிக்க ஹிப்போலிட்டஸ், கலிஸ்துசை கப்பலில் ஏற்றிச் சென்றான். அப்போது கலிஸ்துஸ் கப்பலிலிருந்து தப்பிக்க முயன்று கடலில் குதித்தார். ஆனால் ஹிப்போலிடஸ் அவரைப் பிடித்து உரோம் நகர் கொண்டு சென்று, கொடுமையான தண்டனையை விதித்தான். 10 ஆண்டுகள் கழித்து விடுதலையானார்.

கலிஸ்துஸ் அடிமையாக இருந்தபோதும், அவரின் விசுவாசத்தையும் இறையியல் பண்பையும் கண்ட திருத்தந்தை செப்ரினுஸ் என்பவரால் திருத்தொண்டராக்கப்பட்டார். 219 ஆம் ஆண்டு செப்ரினுஸ் இறக்கவே அவருக்குப்பின் இவர் பேதுருவின் அரியணையில் திருத்தந்தையானார். அதோப்சியானிஸ்தர்கள் என்றழைக்கப்பட்ட, திருச்சபைக்கு முரணான கோட்பாடுடையவர்களுக்கு எதிராக போராடினார். கடவுளின் இரக்கமும், பராமரிப்பும் தொடர்ந்து திருச்சபையை காத்து வழிநடத்துமாறு, எந்நேரமும் இறைவேண்டல் செய்து, எதிர்வந்த துன்பங்களை வென்றார்.


செபம்:
விடுதலை வழங்குபவரே! அடிமைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, உமது தைரியத்தைத் தாரும். நீதிக்கெதிராக குரல் கொடுத்து விடுதலை வாழ்வு வாழ வரம் தாரும். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர வாழ்வை சுவைத்து வாழ, வாழ்வில் நிம்மதியடைய, உணர்வுகளை வெளிப்படுத்தி வாழ உமதருள் தாரும்.

No comments:

Post a Comment