Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 13 October 2015
இன்றைய புனிதர் 2015-10-14 புனித முதலாம் கலிஸ்துஸ் St.Callistus I
இவர் ஓர் அடிமையாக இருந்தவர். ஹிப்போலிடஸ் அரசன் (Hippolytus) மக்களை கொடுமைப்படுத்தி, கடுமையான விதிகளை விதித்து, கொலை செய்தான். மக்களை தன் விருப்பப்படி அடக்கி, ஆண்டுவந்ததுடன், அவர்களை தன்னிடம் அடிமையாகவும் வைத்தான். கலிஸ்துஸ்சையும் அவன் பிடியில் வைத்திருந்தான். அவன் செய்த அனைத்து அட்டூழியங்களையும் கலிஸ்துஸ் பொறுமையோடு ஏற்று, கிறிஸ்துவை தன் நெஞ்சில் சுமந்தார். கிறிஸ்துவ மக்களுக்காக போராடினார். அநீதிகளை தைரியத்துடன் தட்டிக்கேட்டார். இதனால் இவருக்கு கடுமையான தண்டனை அளிக்க ஹிப்போலிட்டஸ், கலிஸ்துசை கப்பலில் ஏற்றிச் சென்றான். அப்போது கலிஸ்துஸ் கப்பலிலிருந்து தப்பிக்க முயன்று கடலில் குதித்தார். ஆனால் ஹிப்போலிடஸ் அவரைப் பிடித்து உரோம் நகர் கொண்டு சென்று, கொடுமையான தண்டனையை விதித்தான். 10 ஆண்டுகள் கழித்து விடுதலையானார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment