Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 24 October 2015

இன்றைய புனிதர் 2015-10-24 பேராயர் அந்தோனி மரிய கிளாரெட் Antonius Maria Claret


பிறப்பு23 டிசம்பர் 1807,சாலெண்ட் Sallent, ஸ்பெயின்


இறப்பு24 அக்டோபர் 1870,ஃபோண்ட்ஃப்ரோய்ட் Fontfroide, பிரான்ஸ்

முத்திபேறுபட்டம்: 1934 புனிதர்பட்டம்: 7 மே 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 28 ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்ப ட்டார். பல ஆண்டுகள் கத்லோனியாப் பகுதி(Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார். 1843 ஆம் ஆண்டிலிருந்து முழு நேர மறைப்பணியாளராக பணியாற்றினார். 1849 ஆம் ஆண்டு கிளரீசியன் (Clarentiner) என்ற துறவற சபையை உருவாக்கினார். 1850-1857 ஆம் ஆண்டுவரை கியூபாவில் (Cuba) ஆர்ச்பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1857 ஆம் ஆண்டு அரசி 2 ஆம் இசபெல்லா (Königin Isabella II) அவர்களின் ஒப்புரவு அருட்சாதன குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார். ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பவந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள விச் (Vich) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செபம்:
அன்பே உருவான இறைவா! புனித அந்தோனி மரிய கிளாரட் மக்கள் நடுவில் நற்செய்தியை அறிவிப்பதில் அவருக்கு வியப்புக்குரிய அன்பையும், பொறுமையையும் அளித்து திடப்படுத்தினீர். நாங்கள் உமது விருப்பத்தையே அனைத்திலும் தேடவும், சகோதரர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருவதில் ஊக்கமுடன் ஈடுபடவும், அவருடைய வேண்டுதலால் எங்களுக்கு அருள்புரிவீராக

No comments:

Post a Comment