Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 20 October 2015
இன்றைய புனிதர் 2015-10-21 மறைசாட்சி ஊர்சுலா Ursula
இவர் ஆங்கிலேயர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். சிறுபிள்ளையாக இருக்கும்போதே, துறவிகளுக்குரிய வார்த்தைப்பாடுகளை எடுத்தார். ஆனால் இவரின் தந்தை, செல்வந்தர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். ஆனால் ஊர்சுலாவின் இதயம் இறைவனையே நாடியது. இவர் ஒருமுறை கடலில் பயணம் செய்யும்போது, பலத்த காற்று ஏற்பட்டது. அப்போதுதான் சென்ற கப்பலை, கொலோன் நகரை நோக்கி செல்ல ஊர்சுலா கூறவே கப்பலானது கொலோன் நகரை வந்தடைந்தது. அப்போது அழகு வாய்ந்த ஊர்சுலா ஹீனன்கொனிஷ் (Hunnenkönig) என்பவரால் கவரப்பட்டார். ஆனால் அவ்வரசனின் விருப்பத்திற்கிணங்க ஊர்சுலா மறுத்தார். இதனால் அவனால் கொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 1106 ஆம் ஆண்டில் இவரின் புனிதப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இவரின் பெயரில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment