Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 20 October 2015

இன்றைய புனிதர் 2015-10-21 மறைசாட்சி ஊர்சுலா Ursula


பிறப்பு3 ஆம் நூற்றாண்டு(?), இங்கிலாந்து (?)


இறப்பு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு,கொலோன்

பாதுகாவல்: கொலோன் மறைமாவட்டம், இளைஞர்கள், ஆசிரியர்கள், அமைதியான மரணம்

இவர் ஆங்கிலேயர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். சிறுபிள்ளையாக இருக்கும்போதே, துறவிகளுக்குரிய வார்த்தைப்பாடுகளை எடுத்தார். ஆனால் இவரின் தந்தை, செல்வந்தர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். ஆனால் ஊர்சுலாவின் இதயம் இறைவனையே நாடியது. இவர் ஒருமுறை கடலில் பயணம் செய்யும்போது, பலத்த காற்று ஏற்பட்டது. அப்போதுதான் சென்ற கப்பலை, கொலோன் நகரை நோக்கி செல்ல ஊர்சுலா கூறவே கப்பலானது கொலோன் நகரை வந்தடைந்தது. அப்போது அழகு வாய்ந்த ஊர்சுலா ஹீனன்கொனிஷ் (Hunnenkönig) என்பவரால் கவரப்பட்டார். ஆனால் அவ்வரசனின் விருப்பத்திற்கிணங்க ஊர்சுலா மறுத்தார். இதனால் அவனால் கொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 1106 ஆம் ஆண்டில் இவரின் புனிதப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இவரின் பெயரில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! ஊர்சுலா என்ற பெயரை தாங்கியுள்ள அனைவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை கொடுத்து, வாழ்வை ஆசீர்வதித்து இப்புனிதரின் வழியாக உம் ஆசீர்வாதங்களை நீர் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment