Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 1 November 2015

இன்றைய புனிதர் 2015-11-01 யேசு சபை குரு ரூபர்ட் மாயர் Rubert Mayer SJ


பிறப்பு 23, ஜனவரி 1876, ஸ்டுட்கார்டு Stuttgart, ஜெர்மனி


இறப்பு 1 நவம்பர் 1945, மியூனிக் München, ஜெர்மனி

முத்திபேறுபட்டம்: 3 மே 1987, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்

இவர் தனது இளம் வயது கல்வியை ஸ்டுட்கார்டில் கற்றார். பின்னர் தனது தத்துவயியல் ஃப்ரைபூர்கிலும்(Freiburg), இறையியலை மியூனிக்கிலும், 5 ஆம் செமஸ்டர் இறையியலை தூபிங்கனிலும்(Tübingen) கற்றார். தன் குருத்துவப்பயிற்சியை ரோட்டன்பூர்க்கில்(Rottenburg) மேற்கொண்டார். மே மாதம் 2 ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் தனது மறைப்பணியைத் தொடங்கினார். தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் இவர் வல்லவராய் திகழ்ந்தார்.


இவர் 1906 ஆம் ஆண்டில் தனது மறைபரப்புப் பணியை சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி முழுவதிலும் ஆற்றினார். பிறகு 1912 ஆம் ஆண்டு பெட்டிங்கர் நகர் கர்தினால் (Kardinal von Bettinger) இவரை மியூனிக் திரும்பி வரும்படி அழைத்தார். 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் மூண்டது. அப்போது ரூபர்ட் மாயர், அனைவருக்கும் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் திகழ்ந்தார். இவர் பல முறை போரில் ஈடுபட்ட படைவீரர்களை காப்பாற்றினார். இதனால் இவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். இருப்பினும் தனது மறையுரையால் மக்களை காத்தார். இவர் தன்னுயிரை ஈந்து மற்றவர்களுக்கு பலமுறை வாழ்வளித்தார். 1921ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுற்றபோது, ஏறக்குறைய ஒரு மாதத்தில் 70 முறை மறையுரை ஆற்றி, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டி நம்பிக்கை வழங்கினார். இவர் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தார். இதனால் 1937 ஆம் ஆண்டு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார். இவருக்கு மறையுரை ஆற்ற தடைவிதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்கள் தண்டனையை அனுபவித்தார். அதன்பிறகு மீண்டும் மறைபணியை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். மறைப்பணியை ஆற்றத் தொடங்கிய சில நாட்களில் மீண்டும் சாக்ஸஹவுசன் (Sachsenhausen) என்ற இடத்திலிருந்து வதை முகாமிற்கு(Concentration Camp) பிடித்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயால் தாக்கப்பட்டார். அதன்பிறகு 5 ஆண்டு காலம் பவேரியாவில் இருந்த எட்டல் துறவறமடத்தில் வாழ்ந்தார். அங்கு 5 மாதங்கள் மட்டுமே அவரால் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றமுடிந்தது. மியூனிக்கில் உள்ள ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் சிலுவையை நோக்கி செபிக்கும்போது இறைவனடி சேர்ந்தார். இன்று மியூனிக்கில் இவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பெற்று புகழ்வாய்ந்த ஆலயமாக திகழ்கின்றது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! முதல் உலகப்போரில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் இவ்வுலகில் செய்த சிறுசிறு பாவங்களையும் மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment